நாமக்கல், ஜூலை 15- பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில், காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண் டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 120 ஆவது பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி பாளையம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், பள்ளியில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை செய்திருந்தார்.