districts

img

பள்ளப்பட்டி ஏரி ஆக்கிரிமிப்பு அகற்றம்

சேலம், நவ.19- சேலம், பள்ளப்பட்டி ஏரி ஆக்கிரமிப்புகளை, காவல்  துறை துணையோடு, மாநகராட்சி அதிகாரிகள் செவ்வா யன்று அகற்றினர். சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்திற்குட் பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மாநகராட்சி ஏரி பூங்கா  உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை  ஆக்கிரமித்து, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப் பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாந கராட்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்தாண்டு 75 சதவிகித ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டன. அப்போது சிலரின் எதிர்ப்பு காரண மாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சில கோவில் கள் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு மாநக ராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியும், ஆக்கிரமிப்பு களை அகற்றாததால், செவ்வாயன்று காவல் துறையின ரின் துணையோடு, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிர மிப்புகளை அகற்றினர். சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள், நீர்நிலை இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகளை ஜேசிபி இயந்தி ரம் கொண்டு இடித்து அகற்றினர். கோவில்களை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள 15 நாட்கள்  கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள தாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.