districts

img

மண்புழு மாதிரி தவழ்ந்தவர் பழனிச்சாமி டி.எம்.செல்வகணபதி தாக்கு

சேலம், மார்ச் 27- மண்புழு மாதிரி தரையில் தவழ்ந்து பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. என்னைப் பற்றி பேச எடப்பாடி பழனி சாமிக்கு எந்தவொரு தகுதியும் இல்லை சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி பேசியுள்ளார். சேலம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார் பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, நங்கவள்ளி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏராளமான பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், மண்புழு மாதிரி தரையில் தவழ்ந்து கொண்டு சென்று, சசி கலாவின் காலை பிடித்து பதவி வாங்கி துரோகம் செய்த வர்தான் எடப்பாடி பழனிசாமி. வழக்குக்கு பயந்து ஓடி ஒளிந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்று சொல்ல எந்தவொரு தகுதியும் இல்லை. பெண்கள் தங்களின் அவசர தேவைக்கு யாரிடமும் கை நீட்டக்கூடாது என்பதற்காகவே மாதந்தோறும் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கி வருவது தான்  இந்த அரசு. சந்தடியில் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, எங்களைப் போன்ற ஆட்களை சீண்டாதீர்கள். எடப்பாடி பழனி சாமியை தலைவனாக ஏற்றுக்கொண்டது எங்களுடைய தலையெழுத்து என்றுக்கூறி தற்பொழுது தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றி சொல்கிறேன். நீ என்னை முதுகில் குத்தியதால்தான் சுயமரி யாதை இயக்கத்தில் தற்பொழுது நான் பணி செய்து வரு கிறேன், என்றார்.