நாமக்கல், பிப்.8- பிஏசிஎல் நிறுவனத்தின் முதலீட்டாளர்க ளுக்கு முதிர்ச்சித் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிஏசி எல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியா ளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை தலை மையிடமாகக் கொண்டு ஒன்றிய அரசின் அங்கீகாரத்தோடு பிஏசிஎல் நிறுவனம் 1956 கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பட்டு, இந்தியா முழுவதும் இருந்து 30 ஆண்டு களுக்கு மேலாக இயங்கி வந்தது. நாடு முழு வதும் 6 கோடிக்கும் மேற்பட்ட சாமானிய மக்கள் தங்கள் சேமிப்புகளான பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்நி றுவனம் முதிர்ச்சித் தொகையை வழங்கா மல் நாடு முழுவதும் உள்ள தனது கிளை களை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடி விட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இதன் தீர்ப்பில் நிறுவனத்தின் நிலம் மற்றும் சொத் துக்களை விற்று 6 மாதங்களுக்குள் முதலீட் டாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு காரணங் களால் இதுவரையிலும் முதலீட்டாளர்க ளுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. எனவே, முதலீட்டாளர்களை அலைகழிக்கும் போக்கை கைவிட்டு, ஆவணங்களை அடிப் படையாகக் கொண்டு, முதலீட்டாளர்க ளுக்கு நிபந்தனையின்றி முதிர்ச்சித் தொகையை உடனே வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஏசி எல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணி யாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட் டம், சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகி ராஜீ தலைமை வகித் தார். மாநிலத் தலைவர் ஜோதி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசி னார். இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வி.சதாசிவம், விவசா யிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் தங்கரத்தினம், சிஐடியு தாலூகா நிர்வா கிகள் டி.எஸ்.பொன்னுசாமி, சமதர்மம், பி. ஆறுமுகம், வி.முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சேந்தமங்கலம் வட் டாட்சியரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது. இதேபோல ராசிபுரத்தில் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள் கே.பழனியப்பன், செல்வி, செங்கோடன் உட் பட பலர் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று சேலம் மாவட்டத்தில் கோட்டை மைதானம், ஓமலூர், வாழப் பாடி, சங்ககிரி, ஆத்தூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் வலியுறுத்தி பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியா ளர்கள் சங்க (சிஐடியு) தலைவர்கள் பி.சீனி வாசன், செல்வராஜ், தாமரை, இந்திராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.