ஈரோடு, ஜுலை 8- சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவ காரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஈரோட்டில் விசாரணை மேற்கொண்டனர். ஈரோட்டில் 16 வயது சிறுமியிடமி ருந்து தனியார் கருத்தரிப்பு மையம் கருமுட்டை பெற்றது குறித்து சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இது தொடர்பான காவல் துறையில் வந்த புகாரையடுத்து விசாரணை நடை பெற்று வருகிறது. இதில், சிறுமியின் தாயார், அவரது கணவர், தரகர் மற்றும் போலியாக ஆதார் கார்டு பெற்றுக் கொடுத்தவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை யினர் விசாரணையடுத்து மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் பெருந்துறை யிலுள்ள தனியார் செயற்கை கருத்த ரிப்பு மையங்களிலும், சேலம், வேலூர் மற்றும் வெளி மாநில மருத்துவமனைக ளிலும் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் காப்பகத்தில் வைக் கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன் றதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசா ரணை மேற்கொள்ள தமிழ்நாடு குழந் தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி கள் ஈரோடு வந்து விசாரணையை மேற் கொண்டனர். செயற்கை கருவூட்டலுக்கு ஆரோக் கியமான சுமார் 25 வயது பெண்களிடம் கருமுட்டையைப் பெறலாம். ஆனால் லாப நோக்கத்தில் பெற்றோர் உடந்தை யுடன் தனியார் மையங்கள் சிறுமியி டம் கருமுட்டை பெற்றுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நியாய மும், லாப நோக்கத்தில் குழந்தை உரி மைகளை அப்பட்டமாக மீறி செயல் பட்ட மருத்துவமனை உள்ளிட்ட நிர்வா கங்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு கடுமையான தண் டனை வழங்க வேண்டும் என்கிற கருத்து வலுவாக எழுந்துள்ளது.