உடுமலை, ஆக. 20- உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செவ்வாயன்று விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை விதைசான்று, அங்கக சான்றளிப்பு துறை சார்பாக அங்கக சான்றளிப்பு முதல் சந்தைப்படுத்தல் வரையிலான பயிற்சி அளிக்கப்பட்டது. உடுமலைப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக் குநர் தேவி தலைமையில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பில், விளை நிலத்தின் மண் வளம் காக்க பசுந் தாள் உரம் பயிர்களை பயிரிடுவது மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் விளைநிலங்களுக்கு ஏற்படும் நன்மை கள் குறித்து பேசினார். இதைதொடர்ந்து, விதை சான்று மற் றும் உயிரியம் சான்று உதவி இயக்குநர் மணிகண்டன் விவசா யிகளிடையே பேசுகையில், விதைப்புக்கு தரமான விதை உற்பத்தி குறித்தும், அங்ககச் சான்றளிப்பு நடைமுறைகள் மற் றும் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தார். நிறைவாக உயிர்மச் சான்று ஆய்வாளர் ஹேமா பேசுகையில், இயற்கை வேளாண் முறைகள் இதற்கான சான்றிதழ்கள் பெற வேண்டிய முறைகள் குறித்தும், பங்க ளிப்பு உத்திரவாத திட்டம் (பி ஜி எஸ்) இணையதளத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும்,அங்கக வேளாண்மையில் மண் வளம் பேணுதல், களை கட்டுப்பாடு மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பேசினார். இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.