விசைத்தறியாளர்களின் வாழ் வாதாரம் பாதுகாத்திடவும், மக்க ளுக்கு உரிய நேரத்தில் கிடைத்தி டுவதை உறுதிப்படுத்தவும் தமிழ் நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தியை உடனடியாக துவங்க வேண்டும் என விசைத்தறியாளர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கிகுகிறது. இதில், சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் விசைத்தறியின் வருவாயைக் கொண்டே வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் தொடர் தாக்குதலில் சிறு குறு தொழில்கள் மட்டுமின்றி விசைத்தறிகளும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பண மதிப்பிழப்பு துவங்கி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மூலப்பொருட்களின் ஏற்ற இறக்கம் போன்ற காரணங்க ளால் கடும் நெருக்கடியை இத்தொ ழில் சந்தித்து வருகிறது. நாமக்கல் மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளிலும் பல்வேறு பகுதிகளில் விசைத்த றிகள் உடைக்கப்பட்டு எடைக்கு விற்கப்பட்ட அவலம் நடைபெற் றது. தமிழகத்தில் மட்டும் தோரா யமாக ஐம்பதாயிரத்திற்கும் மேற் பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப் பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பாக கொடுக்கப் படும் இலவச வேட்டி, சேலை திட் டத்தினால், ஒருபகுதி விசைத்தறி யாளர்கள் தங்களது வாழ்வா தாரத்தை பாதுகாத்து வருகின் றனர். எனவே, தமிழ்நாடு அரசு இலவச வேட்டி சேலை உற்பத்திக் கான பணிகளை இப்போதே துவக்க உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கை விசைத்தறி யாளர்கள் மத்தியில் எழுந்துள் ளது. இதுகுறித்து விசைத்தறியாளர் கள் கூறுகையில், தமிழகத்தில், 66 ஆயிரம் விசைத்தறிகளில், பள்ளி சீருடை மற்றும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண் டுக்கு ஆறு முதல் ஏழு மாதம் வரை வேலைவாய்ப்பு கிடைத்து வருகி றது. இலவச வேட்டி சேலை உற்பத் தியில், 80 சதவீதம் வரை, ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரக விசைத்தறியாளர்களே உற்பத்தி செய்கிறார்கள். போதுமான ஆர்டர் இல்லாத நிலையில், பெரும்பா லான விசைத்தறி பட்டறைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. இதனால், தொழிலாளர்கள் வேலையின்றி, வேறு வேலை களைத் தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க தமிழக அரசு இலவச வேட்டி சேலை உற்பத்தியை உட னடியாகத் தொடங்க வேண்டும். இதற்கான அரசாணையை பிறப் பித்து, நூல் பரிவர்த்தனைக்கான டெண்டரை வெளியிட வேண்டும். அப்போதுதான் ஜூலை மாதத்தில் உற்பத்தியைத் தொடங்க முடியும். மேலும், ஜனவரி மாதம் பொங்க லுக்கு, 1.73 கோடி சேலைகள், 1.68 கோடி வேட்டிகளை அரசு வழங்க வேண்டியுள்ளது. ஜூலையில் உற்பத்தியைத் தொடங்கினால், டிசம்பர் இறுதிக்குள் பணி களை முடிக்க முடியும். உற்பத்தி யைத் தொடங்குவதில் காலதாம தம் ஏற்பட்டால், உரிய காலத்தில் இலவச வேட்டி சேலைகளை வழங்க முடியாத நிலை ஏற்படும். இது உரிய காலத்தில் பொதுமக்க ளுக்கு இலவச வேட்டி, சேலை களை கொண்டு போய்ச்சேர்த்துவ தில் கால தாமதம் ஏற்படும். எனவே, இலவச வேட்டி சேலை உற்பத்திப் பணிகளை அரசு உடனடியாக தொடங்கவேண்டும் என்றனர். இதுகுறித்து விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங் கல் சமயத்தில், தமிழ்நாடு முழு வதும் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு பொங்கல் பரிசாக இலவச வேட்டி, சேலை வழங்குவதை தமிழ் நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக வேட்டி, சேலை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தாமதப்ப டுத்தப்பட்டதால், அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வேட்டி, சேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நடப்பாண்டில் இதுவரை நூல் வாங்குவதற்கான ஆரம்ப கட்டப்ப ணிகள் தாமதமாகின்ற காரணத் தினால், 2025 ஆம் ஆண்டு பொங்க லுக்கு முன்பாக எல்லோருக்கும் பொங்கல், வேட்டி சேலைகள் கொடுப்பது சாத்தியமில்லாமல் போக வாய்ப்புள்ளது. மேலும் தாமதமாக்கி தேவையான நூலை அரசு கொள்முதல் செய்து, விசைத் தறியாளர்களுக்கு துணி தயாரிப்ப தற்கு கொடுக்கும் பொழுது. குறு கிய காலத்தில் விசைத்தறியா ளர்களால் தயாரிக்க முடியாத நிலை ஏற்படும். துணியின் தரமும் கேள்விக்குறியாகும். மேலும், கடந்தாண்டைவிட இந்தாண்டு குறைவான விசைத்தறிகளே இயங்குகின்றன. கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், துரிதமாக செயல் பட்டு விரைவாக வேட்டி, சேலை தயாரிப்புப் பணிகளை துவங்க வேண்டும் என்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, விரைந்து தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பில் வழ ங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலை உற்பத்தியை துவக்க உரிய உத்தரவை எதிர்பார்க்கின்றனர் விசைத்தறியாளர்கள்.