districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலை விபத்தில் இளம்பெண் பலி

சாலை விபத்தில் இளம்பெண் பலி சேலம், பிப்.13- சேலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த சந் தியா (22) என்ற இளம்பெண், சேலை விற்பனை செய்யும்  தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சேலை கொள் முதல் செய்வதற்காக ஈரோட்டிற்கு தனது இருசக்கர வாக னத்தில் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தார். அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பின் மீது மோதியது. அப்போது பின்னால் வந்த லாரி சந்தியா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம் பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தருமபுரி, பிப்.13- பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண் டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சர்க்கரை ஆலை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பெ.செல்வ ராணி தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணை இயக்கு நர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) ஆர்.புவனேஸ்வரி, ஸ்லைடு காட்சி மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தொழு  நோய்  விழுப்புணர்வு குறித்து பேசினார். தொழுநோய் என்பது அதுவும் மற்ற நோய்களைப்போல் ஒரு கிருமியினால் ஏற்படு கிறது. மைக்ககோ பேக்டீரியம் லெப்ரே என்ற கிருமியினால் (Droplet infection) காற்றின் மூலம் பரவுகிறது. சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சி குறைந்த அல்லது உணர்ச்சி யற்ற தேமல் தொழுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம், என்றார். ஆரம்ப நிலையில் நோயை கண்டறிவது, உடல் ஊனத்தை தவிர்க்கும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்குள் தொழு நோயை ஒழிப்பது குறித்தும் அறிவுரை வழங்கப் பட்டது. இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் எம்.சிவகுரு, சுகாதார மேற்பார்வையாளர் கே.இளவரசு, சுகாதார ஆய்வாளர் கே.சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பார்வை குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம், பிப்.13- பார்வை குறைபாடு குறித்து பொதுமக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பார்வை குறை பாடு தினம் கடைப்பிடிக்கப்பட்டு, அரசு மற் றும் தனியார் அமைப்பின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. அதன்ஒருபகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் கல்லூரி  சார்பில், பார்வை குறைபாடு குறித்த விழிப் புணர்வு திரைப்படம் வெளிளிடப்பட்டது. சேலம் மாநகர ஆயுதப்படை கூடுதல் துணை காவல் ஆணையர் ரவிச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோர்  துவக்கி வைத்தனர். தொடர்ந்து, கண் ஒளியில் பிரிவின் மூலம் பார்வை குறைபாடு குறித்து  பொதுமக்கள் உணரும் வகையில், எடுக் கப்பட்டிருந்த திரைப்படத்தையும் பார்வை யிட்டனர். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு பேரணி 
விழிப்புணர்வு பேரணி  நாமக்கல், பிப்.13- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் மற்றும் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய தலை கவசம் அணி வதன் அவசியம் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணிந்து  செல்வதன் அவசியம் குறித்து வாகனப் பேரணி நடைபெற் றது. திருச்செங்கோடு வேலூர் ரோடு மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியை திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். இப்பேரணி அரசி னர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவ டைந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.22 லட்சம் மோசடி: ஆட்சியரிடம் புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.22 லட்சம் மோசடி: ஆட்சியரிடம் புகார் சேலம், பிப்.13- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பகுதியைச் சேர்ந்த மகா தேவ் என்பவர் பொறியியல் பட்டதாரியாக உள்ளார். இந்நி லையில், அரசு வேலை வாங்கித் தருவதாக சேலம் நாடாளு மன்ற உறுப்பினரின் முன்னாள் உதவியாளர் பழனிச்சாமி என்பவர், 22 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போலி பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றி விட்டதாக  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித் தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளராக இருப்பதாக அறிமுகமாகிய பழனிச்சாமி, அவரது மகன் கந்தபாலன் மற்றும் நித்தியானந் தம், சந்தோஷ் பாண்டியன் ஆகியோருடன் இணைந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதன்மைச் செயலாளர்  மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் பெட்ரோல் பங்க் உரிமம் அல்லது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணி வாங்கி தருவதாக சொன்னார்கள். இதற்கு முன்பாக மேட்டூரைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும் கூறினார்கள். இதனை நம்பி 22 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுப்பணித்துறை யில் ஜேஇ பதவிக்கான பணி நியமன ஆணையை தன்னிடம்  வழங்கினர். இதனை நம்பி வேலையில் சேர சென்றபோது அந்த ஆணை போலியான நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தேன். அந்த புகார் சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது போன்ற ஒரு போலியான சான்றிதழ் மற்றும் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இருந்து போலி  நியமன ஆணையை தமிழ்நாடு அரசு வழங்கியது போன்று  போலி நியமன ஆணை உள்ளிட்டவைகளை வழங்கினர். எனவே, இதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும், என பாதிக்கப் பட்ட மகாதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்

திருப்பூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதம் திருப்பூர், பிப். 13 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 10 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டு களுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  பணியிடங்களை நிரப்ப வேண்டும், சான்றிதழ் வழங்கும் பணிக்கு புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்ப டுத்த வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய் வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும்,   அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து திட்டப்  பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம்  மற்றும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்  துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

வேட்டுவபாளையத்தில் டேங்கர் லாரி சிறைபிடிப்பு

வேட்டுவபாளையத்தில் டேங்கர் லாரி சிறைபிடிப்பு அவிநாசி, பிப்.13 - அவிநாசி அருகே வேட்டுவபாளையம் ஊராட்சியில் கழிவு நீர் கொட்ட வந்த டேங்கர் லாரியை பொதுமக்கள் திங்கட்கி ழமை இரவு சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்டுவபாளையம் பகுதியில் 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் பல ஏக்கர் கணக்கில், விவசாய  விளைநிலங்கள் உள்ளன. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு கழிவுநீர் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபி டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் கூறிய தாவது, ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்கு முன் எங்கள் பகு தியில் கழிவுநீர் கொட்ட வந்த லாரியை சிறைபிடித்தோம். அப் போது, இனிவரும் காலங்களில் வேட்டுவபாளையம் ஊராட் சியில் கழிவுநீர் கொட்ட வரமாட்டோம் என சேவூர் போலிஸார்  முன்னிலையில் உறுதியளித்தனர். இதையடுத்து லாரியை  பொதுமக்கள் விடுவித்தனர். தற்போது மீண்டும் கழிவுநீரை  கொட்ட வந்துள்ளனர். இதேபோல கழிவுநீரை கொட்டினால்,  விளைநிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, குடியிருப்புப்  பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாய மும் உள்ளது. ஆகவே வேட்டுவபாளையம் ஊராட்சியில் கழி வுநீர் கொட்டமாட்டோம் என உறுதியளிக்க வேண்டும். பொது மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கழிநீர் கொட்ட வந்தோர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை லாரியை விடு விக்க மாட்டோம் என்றார்.

அமராவதி பிரதான கால்வாய் வலது கரை உடைப்பு சீரமைப்பு

அமராவதி பிரதான கால்வாய் வலது கரை உடைப்பு சீரமைப்பு திருப்பூர், பிப். 13 - திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மேற்கு கொம ரலிங்கம் கிராமத்தில் அமராவதி பிரதானக் கால்வாய் வலது  கரையில் உடைப்பு ஏற்பட்டதை சீரமைக்கும் பணி நடைபெறு கிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் இப்ப ணியைப் பார்வையிட்டார்.  அமராவதி பிரதானக்கால்வாயின் வலது கரையில் உள்ள  கீழ்மட்ட குகைவழிப் பாதையின் வலதுபுற பக்கவாட்டின் உட் புறச் சரிவில் உள்ள சிமென்ட் பலகைகளின் சிமெண்ட் காரை  இணைப்புகளில் கசிவு ஏற்பட்டு வலது கரையில் உடைப்பு  ஏற்பட்டது. இதன் காரணமாக அணையில் அமராவதி பிரதா னக்கால்வாயின் மதகு அடைக்கப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது. அமராவதி பிரதானக் கால்வாயில் உள்ள 7 சுரங்கவழி பாதைகள் 5 தலைப்பு மதகுகள் 18 நேரடி மதகுகள் உள்ளிட்ட  குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இப்பணியினை துரிதமாக முடித்து, வாய்க்காலில் விரை வில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கைகள் மேற் கொள்ளும்படி துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார். பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆவணத்தை பதிவு செய்வதில் குளறுபடி: சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, பிப்.13- பதிவுத்துறை தலைவரின் சுற்ற றிக்கைகளைப் பொருட்படுத்தாமல் முன் ஆவணத்தைக் கூடப் பரிசீலிக் காமல் ஆவணத்தைப் பதிவு செய்து  கொடுத்த சார்பதிவாளர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஆவண எழுத்தர் சு. சிவசங்கர் பதிவு குறைதீர்க்கும் முகா மில் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது,    நான் உடுமலைப்பேட்டை யில் ஆவண எழுத்தராகப் பணிபு ரிந்து வருகிறேன். பதிவு விதிகளின்  படியும், பதிவுத் துறைத் தலைவரின்  சுற்றறிக்கைகளின் படியும், சார்பதி வாளர்கள் அவ்வப்போது கூறும் விதி முறைகள், வழிமுறைகள் படியும்  ஆவணம் தயாரித்துக் கொடுத்து  வருகிறேன். ஆனால் மேற்சொன்ன  விதிமுறைகளை, சுற்றறிக்கை களை, வழிமுறைகளை மீறி எழுதிக்  கொடுப்பவர் பெயரில் பட்டா இல்லா தது, அங்கீகாரம் பெற்ற  மனைப்பி ரிவு வரைபடத்திற்குப் பதிலாக கணினி வரைபடத்தை இணைப்பது, அசல் ஆவணம் இல்லாதது, பதிவுக் குத் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத் தில் குறிப்பிடப்பட்ட முன் ஆவணத் தின்படி உரிமையே இல்லாதவர் எழு திக் கொடுப்பது முதலான இன்ன பிற  காரணங்களாலும் நான் மறுக்கும் ஆவணங்களை உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களிலேயே சிலரும்,  உரிமம் இல்லாதவர்கள் பலரும் தயா ரித்துக் கொடுத்து அந்த ஆவணங் கள் பதிவுக்குத் தாக்கல் செய்யப்பட் டால் எவ்வித மறுப்போ, ஆட்சேப னையோ தெரிவிக்காமல் அந்த ஆவ ணங்களைப் பதிவு செய்து கொடுத் துக் கொண்டிருக்கும் சார்பதிவாளர் கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றார்கள். சார்பதிவாளர்கள் சுற்றறிக் கைகளின்படி எல்லை விவரங்கள் உள்பட அனைத்தையும் சரிபார்க்க வேண்டும் என உள்ள நிலையில், பதி வுக்குத் தாக்கல் செய்யப்படும் ஆவ ணத்தில் குறிப்பிடப்பட்ட முன் ஆவ ணத்தின்படி உரிமையாளர் யார்  என்ற  விவரத்தைக் கூடப் படித்துப் பார்க்கா மல் பதிவு செய்து கொடுத்து விடுகி றார்கள். இதனால் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி ஆவணம் தயாரித்துக் கொடுப்பவருக்கு தொழில் பாதிப்பையும், வருமான இழப்பும் ஏற்படுகிறது. மேலும், விதி களை மீறிய ஆவணங்களைப் பதிவு  செய்து கொடுப்பதன் மூலம் அந்த ஆவணங்களை எழுதிப் பெற்ற சொத் தின் உரிமையாளர்கள் சொத்தை விற் கவோ, கடன் பெறவோ இயலாமல் பெரும் பாதிப்புக்கும், மன உளைச்ச லுக்கும் ஆளாகின்றனர். எனவே இதன் மீது உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கூறப்பட்டுள்ளது.

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அவிநாசி, பிப்.13- அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கி ழமை (இன்று) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மின் சார வாரியம் திருப்பூர் மின்  பகிர்மான வட்டம் மேற் பார்வை பொறியாளர் பங் கேற்று, மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்ட றிந்து நிவர்த்தி செய்கிறார். இதில், மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெ றுமாறு, அவிநாசி மின்  கோட்ட செயற் பொறியாளர்  பரஞ்சோதி தெரிவித்துள் ளார்.

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது கோவை, பிப்.13- பொள்ளாச்சி அருகே வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்த போலீசார், 56 பவுன் நகை மற் றும் ரூ.28 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனை மலை கோட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடையாளம் தெரி யாத நபர்கள், தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தது. இதை யடுத்து, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி களை தேடி வந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், யமஹா ரே வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் சுற்றித் திரிவதும், வீட்டில் ஆட் கள் இல்லாத பகுதிகளில் நோட்டம் விடுவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அவரை பிடிக்கும்  பணியில் ஈடுபட்ட போலீசார், கோட்டூர் பகுதியில் வசித்து வந்த  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனை கைது செய்த னர். இதனைத்தொடர்ந்து, கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதியில் வீடு புகுந்து திருடிய ஆறு வழக்குகளில் தொடர்பு டைய 56 பவுன் நகை, 28 லட்சம் ரூபாய் ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், நடத்தப்பட்ட விசார ணையில், கோட்டூர் பகுதியில் கொத்தனார் வேலை செய்து  கொண்டே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற அழைப்பு ஈரோடு, பிப்.13- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்களை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  சீர்மரபின மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத் தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, தொழிற்படிப்பு பாலிடெக்னிக் போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதிய மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login-இல் சென்று ஆதார் எண் அளித்து இ-கே ஒய் சி சரிபார்ப்பு செய்ய வேண்டும். புதிய விண்ணப்பங்களை மாணாக்கர்கள் இம்மாதம் 29ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரி வித்துள்ளார்.

தனியார் துணி தயாரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

மே.பாளையம், பிப்.13- மேட்டுப்பாளையத்தில் உள்ள தனி யார் துணி தயாரிப்பு ஆலையில் இருந்த மின்மாற்றி திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் நகரில் இருந்து வனப்பத்திரகாளி யம்மன் கோவில் செல்லும் வழியில் சாலையோரம் அமைந்துள்ளது தனி யார் துணி தயாரிக்கும் மில். இந்த ஆலைக் கென தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், தனியாக மின்மாற்றி அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகி றது. இந்நிலையில், ஆலை வளாகத்தி னுள் உள்ள இம்மின்மாற்றியில் திங்க ளன்று இரவு திடீரென தீப்பற்றிக்கொண் டது. உயரழுத்த மின்சார இணைப்பு என் பதால், அதன் இணைப்பு மின்கம்பிகள் துண்டாகி நெருப்பு சுமார் இருபதடி உயரம் வரை கொழுந்து விட்டு எரிந் தது. இதுகுறித்து, உடனடியாக மின்வா ரிய அலுவலகத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  அதேபோல் தீயணைப்பு துறையின ரும் சம்பவ இடத்திற்கு சென்று மின்மாற் றியில் பற்றிய தீ வேறு எங்கும் பரவா மல் தடுத்து, சுமார் இரண்டு மணி நேரம்  போராடி தீயை கட்டுக்குள் கொண்டு  வந்தனர். இவ்விபத்து காரணமாக ஆலையை சுற்றியுள்ள பகுதி முழுவ தும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி யது.

உலக வானொலி தினம்: 13 மணி நேர தொடர் நேரலை

கோவை, பிப்.13- 13 ஆவது உலக வானொலி தினத்தை ஒட்டி, 13 மணி நேரம் சமுதாய  வானொலியில் தொடர் நேரலை நடத் தப்பட்டது. ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம்  தேதி உலக வானொலி நாளாக கொண் டாடப்பட்டு வருகிறது. வானொலி ஒலி பரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக் கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், வானொலி மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்கு விக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம், பீள மேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. கல் லூரியில் இருந்து பி.எஸ்.ஜி. சமுதாய  வானொலி இயக்கப்பட்டு வருகிறது.  கடந்த 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வானொலி, காலை 6 மணி முதல்  11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 10 மணி வரையும் ஒலிபரப்பு செய்து  வருகிறது. பொழுதுபோக்கு அம்சங் கள் இன்றி, சமுதாயம் சார்ந்த தகவல் கள், மக்கள் பயன்பெறும் வகையிலான விபரங்கள், விழிப்புணர்வு தகவல்கள் உள்ளிட்டவை ஒலிபரப்பப்பட்டு வரு கின்றன. இந்த வானொலியை அப்ப குதியைச் சுற்றி 10 கி.மீ. தொலைவிற் குள் உள்ள மக்கள் கேட்க முடியும். இந் நிலையில், உலக வானொலி தினத்தை முன்னிட்டு, செவ்வாயன்று, 13 மணி  நேரம் தொடர் நேரலை நடத்தப்பட்டது. இதுகுறித்து பி.எஸ்.ஜி. சமுதாய வானொலி நிலையத்தின் இயக்குநர் சந்திரசேகரன் கூறுகையில், இந்த சமு தாய வானொலி 2007 ஆம் ஆண்டு துவங் கப்பட்டது. 16 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இயங்கி வருகிறது. 8 வயது முதல் 80  வயது வரை அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வானொலி இயங்கி வருகிறது. ரேடியோ ஹப் என்ற பெய ரில், இக்கல்லூரியில் படிக்கும் மாண வர்களை சமுதாய வானொலியில் பங்க ளிப்பு செய்ய வைத்து வருகிறோம். நாங் கள் நடத்திய ஆய்வில் 24.4 சதவிகி தம் பேர் இந்த வானொலியை கேட்கின்ற னர் என்பது தெரியவந்தது எனத் தெரி வித்தார்.

குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை
குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை உதகை, பிப்.13- நீலகிரி மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை  என உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் கியாசனூர் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 53 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரி ழந்துள்ளனர். குறிப்பாக அங்குள்ள உத்தரகர்நாடகம் ஷிவ மொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, பாதிப்புகள், ரத்தப்போக்கு போன் றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த வகை காய்ச்சலை  பிசிஆர் மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்ய லாம். கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழக எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ண கிரி, நீலகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில், நீலகிரி மாவட்டம் சுமார் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்ட மாவட்டம் ஆகும். கர்நாடக, கேரள மாநிலங்களின் எல்லை யில் அமைந்துள்ளதால், அந்த மாநிலங்களில் ஏற்படும் டெங்கு, குரங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்துக்குள் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நீல கிரி மாவட்டத்தில் தற்போது வரை யாருக்கும் குரங்கு காய்ச் சல் பாதிப்பு ஏற்படவில்லை, என்று கூறினார்.

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி உதகை, பிப்.13- குன்னூரில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலே உயிரி ழந்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (48) என்பவர், விவசாயம் செய்து வரு கிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், தோட்டத்தில் வெள்ளை பூண்டு பயிரிட்டிருந்த குருமூர்த்தி, அதற்கு தண் ணீர் பாய்ச்ச மோட்டர் இயக்கியபோது மின்கசிவால் தண்ணீ ரில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அப்போது அருகி லிருந்த குடியிருப்பு வாசிகள் அவரை மீட்டு குன்னூர அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர்  வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித் தனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மின்கசிவு ஏற்பட்ட சம்பவ இடத்தில் காவல் துறையினர், தடயவியல் துறை, மின்சாரத்துறையினர் ஆய்வு செய்தனர். பின்பு அந்த மின் கசிவு கண்டறியப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை

வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை கோவை, பிப்.13- பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே நவமலை சாலை யில் சென்ற இரு சக்கர வாகனத்தை ஒற்றை காட்டு யானை  சேதப்படுத்தியது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனை மலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில  நாட்களாக ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இதுகுறித்து வனத் துறையினர் ஏற்கனவே மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப்  பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஆனைமலை அடுத்த கவியருவி அருகே உள்ள நவமலை  சாலையில், செவ்வாயன்று மாலை 3 மணி அளவில் ஒற்றை  காட்டு யானை உலா வந்தது. மேலும் அப்பகுதியில்  சென்ற இரு சக்கர வாகனத்தையும் முட்டி சேதப்படுத்தி யது. ஒற்றை யானை இரு சக்கர வாகனத்தை முட்டி  தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைர லாகி வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்து றையினர் எச்சரித்துள்ளனர்.

தண்ணீர் தொட்டி மீது ஏறி பெண் கவுன்சிலர் போராட்டம்

மே.பாளையம், பிப்.13- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை நகராட்சியில் மொத் தம் 27 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு களில் வசிக்கும் மக்களுக்கு தேக்கம்பட்டி பகு தியில் இருந்து குடி தண்ணீர் எடுத்து விநியோ கம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலை யில், காரமடை நகராட்சி 15 ஆவது வார்டுக் குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்க ளாக முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வில்லை என கூறப்படுகிறது.  முறையற்ற குடிநீர் வினியோகம் குறித்து  நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் உள் ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சி யமாக பதில் கூறுவதாக குற்றம்சாட்டி திமுக வைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் கவுன்சி லர் நித்யா மங்களகரைபுதூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது  ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் உள்ளூர் மக்களும் இணைந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கார மடை காவல் ஆய்வாளர் ராஜசேகர் போராட் டத்தில் ஈடுபட்ட நித்யாவிடம் பேச்சுவார்த்தை  நடத்தி போராட்டத்தை கைவிடச்செய்தார்.

காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை பேக்கரியின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு

நாமக்கல், பிப்.13- காலாவதியான ரொட்டியை விற்ற பேக் கரி உரிமத்தை ரத்து செய்ய உணவு பாது காப்பு அலுவலருக்கு நாமக்கல் மாவட்டம்   நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாமக்கல் அருகே சின்ன வேப்பநத்தத் தில் வசிப்பவர் ப.சுப்பிரமணி(59). இவர் கடந்த 2023 செப்டம்பர் மாதம் நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு  பேக்கரியில் (சரவணாஸ் பேக்கரி - சபாஷ்)  கோதுமை பிரட் ஒன்றை வாங்கியுள்ளார். வீட் டுக்குச் சென்று குழந்தைகளுக்கு பிரட்டை கொடுப்பதற்கு முன்னதாக கவனித்த போது  வாங்கி வந்த பிரட் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் சுப்பிரமணி வழக்கு தாக்கல் செய்தார்.  இதுகுறித்து பதில் அளிக்குமாறு நீதிமன் றத்தில் அறிவுப்பு அனுப்பியும் அதனைப் பெற்றுக் கொண்ட பேக்கரி உரிமையாளர் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் வழக்கு தாக்கல் செய்தவரை விசாரித்து அவ ரால் சமர்ப்பிக்கப்பட்ட ரசீது மற்றும் கோதுமை பிரட் பொட்டலம் ஆய்வு செய்யப் பட்டது. விசாரணை முடிவடைந்த நிலை யில் செவ்வாயன்று (நேற்று) மாவட்ட நுகர் வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ் மற்றும்  உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பு  வழங்கினார். இதில், பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு பேக்கரி உரிமையாளர்  இழப்பீடா கவும் வழக்கு செலவு தொகையாகவும் ரூபாய் 4,000-தை நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும், மேலும், ஒரு வார  காலத்துக்குள் பேக்கரி உரிமையாளர் நீதி மன்றத்தில் ஆஜராகி காலாவதியான உணவு  பொருளை விற்க மாட்டோம் என்ற உறுதி  மொழியை வழங்க வேண்டும். குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஏன் உணவுப் பொருள் விற்பனை உரிமத்தை ரத்து செய்யக் கூடாது? என்பதற்கு தகுந்த விளக்கத்தையும் சமர்ப்பிக்க  வேண்டும். உறுதி மொழியை சமர்ப்பிக்க தவறினாலும் விளக்கம் ஏற்புடை யதாக இல்லை என்றாலும், உரிமத்தை ரத்து  செய்ய மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவல ருக்கு உத்தரவிடப்படும் என்று  இந்த தீர்ப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு நாமக்கல் மாவட்டத்தில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.