தருமபுரி, நவ.8- தருமபுரியில் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டத்தில், மூன்று பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திங்க ளன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் கி.சாந்தி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர்மாற்றம், பட்டா வேண்டு தல், புதிய குடும்ப அட்டை வேண்டு தல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள் ளிட்ட இதர உதவித் தொகைகள் கோரி யும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 439 மனுக்களை அளித்தனர். இதில், பணியின்போது உயிரிழந்த சத்துணவு அமைப்பாளர்கள் மூவரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்ப டையில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையையும், ஒருவருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற் கான ஆணையையும் ஆட்சியா் கி. சாந்தி வழங்கினார். இதேபோல, தருமபு ரி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளான வெங்கடேசன், விஜ யகுமார் மற்றும் அண்ணாமலை ஆகிய மூவரும் சென்னையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8 ஆவ து மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இவர்கள் வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் தேசிய அளவில் நடை பெற உள்ள பாரா நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர். இம் மூவருக்கும் கூட்டத்தில் பாராட்டு தெரி விக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளா்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் (பொ) ஜெ. ஜெயக்குமார் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.