பொள்ளாச்சி, ஜூலை 27- ஒன்றிய பா.ஜ.க அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ் நாட்டை புறக்கணித்ததை கண்டித்து தந்தை பெரியார் திரா விட கழகம் சார்பில் நகரச் செயலாளர் அசோக் தலைமை யில் சனியன்று பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தபெதிக பொதுச் செயலாளர் கு.இராம கிருட்டிணன் உரையாற்றினார். இதில், திமுக சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலாளர் எம்.அன்பரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வி.சண்முகம், விசிக ச.பிரபு, தமுமுக தலில், மஜக அன்சாரி, தபெதிக மனோ கரன் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.