இளம்பிள்ளை, ஜன.11- மகுடஞ்சாவடி அருகே செயல்பட்டு வரும் அரசு வங்கியை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகு டஞ்சாவடி அருகே கண்ணந்தேரியில் இந்தி யன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலை யில், இந்த வங்கி கொங்கணாபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்வதாக வங்கி சார்பில் அறி விக்கப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் திங்களன்று கண்ணந்தேரி இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது தங்கள் பகுதியில் ஏராளமானோர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக வும், இதனை வேறு இடத்திற்கு மாற்றி னால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ் நிலை உருவாகும். எனவே இந்த வங்கியை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது என வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதைய டுத்து வங்கியின் மேலாளர் விஜயராகவனி டம் மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட வங்கி மேலாளர், இதுகுறித்து உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவிப்ப தாக உறுதியளித்தார். இதன்பின் அனை வரும் கலைந்து சென்றனர்.