ஈரோடு, மே 17- சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரும்பு, போலிக் அமிலம், வைட்ட மின் பி.12 வேதி பொருட்கள் அடங்கிய கலவை மாவை அரிசி வடிவில் எந்தி ரங்கள் மூலம் 100 கிலோவிற்கு ஒரு கிலோ வீதம் அரிசியில் கலக்கப்படு கிறது. ஒன்றிய அரசு, அறிவியல் பூர்வ மாக எந்தவித ஆய்வுகளும் செய்யா மல் விநியோகம் செய்வதை கண்டித் தும், பொதுமக்களின் உயிரை சோதனை களம் ஆக்கும் செறிவூட்டிய அரிசி திட் டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதற்குப் பதிலாக சிறு தானியங்களுக் கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித் துள்ளதை நடைமுறைப்படுத்த வேண் டும்.
மேலும், தமிழ்நாடு அரசு எவ்வித விவாதமுமின்றி நிறைவேற்றப்பட் டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் அமைந் துள்ளது. நீர் நிலைகள், நீர்வரத்து கால் வாய்கள், குளம், குட்டைகள், நிலத்தடி நீர்வளம், பாசன உரிமை, சுற்றுச்சூழல் மேய்ச்சல் நிலம், சுடுகாடு, இடுகாடு ஆகியவையும் பாதிக்கும். விவசாயிக ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு இந்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி 4 ரோட் டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாநில துணைத்தலைவர் சி.எம்.துளசிமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் ப.மாரிமுத்து, சிபிஐ தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.பிர பாகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பொன்னு சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே. குப்புசாமி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில், திரளான விவசாயி கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.
நாமக்கல்
திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட உதவித்தலைவர் கே.பூபதி மற் றும் மாவட்ட செயலாளர் பி.செல்வ ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். இதில், மாவட்ட உதவித்தலைவர் ஆர்.வேலாயுதம், மாவட்ட உதவித்தலைவர் ஜோதி, ஒன் றிய தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி, சிபிஎம் நகர செயலாளர் ஐ.ராயப்பன், ஒன்றிய செயலாளர் ஆர்.மனோகரன், ஏஐடியூசி சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். சங்க மாவட்ட தலைவர் ஆ.ஆதிநாராயணன் விளக்க உரையாற்றினார். முடிவில், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி நல்லாக்கவுண்டர் நன்றி கூறினார்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.கே. செல்வ ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எ.அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு, சிபிஐ விவசாய சங்க மாவட்ட தலைவர் எம்.சின்னசாமி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செய லாளர் பி.அரியாகவுண்டர், மாவட்ட துணைத் தலைவர் எம்.பொன்னுசாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் எ.மோகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
கோவை
கோவை மாவட்டம், சுல்தான் பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலா ளர் சி.சபரீஸ்வரன் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் பி.ஆர்.பழனிச்சாமி ஆகியோர் தலைமை ஏற்றனர். இதில், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி, மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி மற்றும் வி.பி.இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றி னர். முடிவில், மாவட்ட துணைச்செயலா ளர் ஜெ.ரவீந்திரன் நன்றி கூறினார். இதில், தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் ராஜா, செய லாளர் ஸ்டாலின் பழனிசாமி மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட, ஒன் றிய குழு உறுப்பினர்கள் உட்பட ஏராள மான விவசாயிகள் பங்கேற்றனர்.