அவிநாசி, மே 4- திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலக இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் திருமுருகன் பூண்டி நகர்மன்ற அலுவலகத்தை, நகராட் சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் செல் லும் சாலையில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றுவதற்காக மண் மாதிரி சேகரிக்கப் பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. நகர்மன்ற தலைவர் குமாரின் இந்த தன்னிச் சையான முடிவை கண்டித்து, நகர்மன்ற உறுப்பினர்கள் குமாரை முற்றுகையிட்ட னர். இதையடுத்து நகர்மன்ற ஆணையர் மற்றும் தலைவர் ஆகியோர், இனி தன்னிச் சையாக முடிவு எடுக்கப்படமாட்டாது, அவ் விடத்தை தேர்வு செய்ய மாட்டோம் என்று முற்றுகையில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பி னர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டால் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். அதோடு மட்டுமில்லாமல் அங்கு போதிய பேருந்து வசதிகளும் கிடையாது. எனவே நகராட்சி அலுவலகத்தின் முன்புறம் உள்ள பகுதியில் கூடுதலாக கட்டிடம் கட்டி தற் போது செயல்பட்டு வரும் இடத்திலேயே அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரமன்ற உறுப்பி னர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார் வதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்த கோபால், மாவட்ட குழு உறுப்பினர் வெங்க டாசலம், ஒன்றிய செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப் பிரமணியம் உள்ளிட்ட அனைத்து கட்சிக ளின் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசி யல் கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.