திருப்பூர், அக். 2- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், வடுகபாளை யம் கிராமம், கே.கே நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாவட்ட ஆட் சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கே.கே.நகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற் சாலைகள் உள்ள அமைதியான பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு ஒரு சிலர் முன்னேற்பாடு செய்து கொண் டுள்ளனர். அதாவது தற்போது உள்ள கடை எண். 3679-ஐ அங்கி ருந்து இடமாற்றம் செய்து வடுகபாளையம் கிராமம், கே.கே. நகர் பகுதியில் அமைக்கப்படுவதாக தெரியவருகிறது. இந்த பகுதியில் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு வருடம் புதிய கடை அமைக்க முயற்சித்த போது, சென்னை உயர் நீதி மன்றத்தில் தடையாணை பெற்று தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே கே.கே. நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிக்கு எல்லா வகையிலும் தீங்கு விளைவிக்கும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.