districts

img

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு

உதகை, அக்.15- ஒன்றிய மோடி அரசின் இந்தி திணிப்பை கண்டித்து உதகையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான போட்டி  தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலம் என  ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு  மாநிலங்கள், பல்வேறு  மொழிகள் பேசும் நாட்டில், இந்தி மட்டும் போட்டித் தேர்வுக்கான மொழி என்பது அநீதியானது என்பது எதிர்ப் பின் நோக்கமாகும். இதன்ஒருபகுதியாக, உதகை அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய  மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்கத் தின் நீலகிரி மாவட்ட செயலாளர் யோகராஜ் தலைமை தாங்கினார். இந்தியாவில் வாழும் மக்களில் 55%  பேருக்கு முதன்மை மொழி இந்தி அல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் விழுமியங்களுக்கு இந்தி திணிப்பு எதிரானது. தேசத்தின் மொழி பன் முகத்தன்மை மீது இந்தி திணிப்பு என்பது கொடூர தாக்குதல் என்கிற முழக்கங்களை எழுப்பினர். இதில்  மாணவர் சங்க இணைச் செயலாளர்  சச்சின் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.