districts

img

தோல்வி பயத்தில் பதறும் அதிமுக மின்துறை அமைச்சரின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு

கோவை, பிப்.14–  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தில் பிரச்சா ரம் செய்யக் கூடாது என புதுவிதமான கோரிக்கைகளோடு அதிமுகவினர் கோவையில் காவல் நிலையத்தை முற்று கையிட்டது பெரும் நகைப்பை ஏற்படுத்தி யுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறி விக்கப்பட்டு, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். தமிழ கத்தில் திமுக தலைமையில் சிபிஎம், காங்கி ரஸ், சிபிஐ, மதிமுக, விசிக, கொமதேக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் அணிவகுப்பில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற்ற கூட்டணியாக தேர் தல் களத்தில் வலம் வருகிறது. மறுபுறத் தில், பாஜகவை தோளில் ஏற்றிக் கொண்டு  அலைந்த பிறகு தற்போது சுமை என தெரிந்து பாஜகவை கழட்டிவிட்டுவிட்டு அதி முக தனியாக தேர்தல் களத்தை சந்திக் கிறது.  முன்னதாக, கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் கடந்த சட்டமன்ற தேர்த லில் பத்து சட்டமன்ற தொகுதிகளையும் அதி முக கூட்டணியே கைப்பற்றியதால் அக் கட்சியினர் தெம்போடு இருந்தனர். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்திலும் அதி முக படுதோல்வியை தழுவிய நிலையில், திமுக பெரும் வெற்றியை ஈட்டியது. இந் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவதற்காக அதிமுக வினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் களம் திமுகவிற்கு சாதகமாக இருப்பதால் என்ன செய்வ தென்றே தெரியாமல் அதிமுகவினர் தவிக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அதிமுக ஆட்சி யில் இருந்தபோது செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் தங்களின் தோல்விக்கு ஏதாவது காரணம் வேண்டும்  என்பதற்கு இப்போதிருந்தே அக்கட்சியி னர் புதுப்புது காரணங்களை தேட துவங்கி யுள்ளனர். இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் செய்யக்கூடாது, அவர் மாவட் டத்தை விட்டு வெளியேற வேண்டும் என  புதுவிதமான கோரிக்கையை முன்வைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்த விவரம் வருமாறு, கோவை மாநகராட்சி 100 ஆவது வார்டில் அதிமுக வினர் கடந்த சில தினங்களாக டோக்கன் விநி யோகத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிந் தவுடன் இந்த டோக்கனை கொடுத்துவிட்டு ரூ.2 ஆயிரத்தை வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பெயரில் ஞாயி றன்று இரவு அதிமுகவைச் சேர்ந்த சிலரை காவல்துறையினர் கோவை இராமநாத புரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனையறிந்து திங்களன்று காலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொண்டர்கள் படைசூழ இராமநாதபுரம் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  அப்போது, தங்களின் தொண்டர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பின்தள்ளி, மின்சார துறை அமைச்சர் உட னடியாக கோவை மாவட்டத்தை விட்டு  வெளியேற வேண்டும். இங்கு அவர் பிரச்சா ரம் செய்யக்கூடாது. கரூர் மாவட்டத்தில் இருந்து வந்த திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த எம் எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து முழக் கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதி காரிகள் கூறுகையில், தமிழ்நாட்டு அமைச் சர் ஒருவர் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்தால் நாங்கள்  என்ன செய்வது. ஆளும் கட்சியாக இருந்த ஒரு கட்சி இப்படி ஒரு விநோதமான கோரிக் கையை வைப்பது ஆச்சரியமாக இருக்கி றது என்றனர். திமுகவினர் கூறுகையில், அமைச்சர் வேலுமணி இங்கிருந்து போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா, ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் உள் ளாட்சியில் சாதித்தோம் என போஸ்ட்டர் ஒட்டி விளம்பரப்படுத்தினார்கள். ஆனால்  எதுவும் உண்மையில்லை என்பது மக்க ளுக்கு தெரியும். ஆகவே டோக்கன் விநி யோகிக்க முடியாமல் தோல்வி பயத்தில் பதறும் அதிமுக தோல்விக்கான கார ணத்தை தேட அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் செய்யக்கூடாது என விநோத மான கோரிக்கையை எழுப்புகின்றனர், என் கின்றனர்.