districts

img

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு - மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்

உதகை, ஜூன் 28- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உதகை யில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்  ஒருபகுதியாக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக் கும், நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இத்திட் டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் உதகை  மார்க்கெட் தபால் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் உதகை  தாலுகா செய லாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், மாவட்டக்குழு உறுப் பினர் சுரேஷ், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் அமைப் பின் தலைவர் ராமன், ஸ்டெர்லிங் பயோடெக் தலைவர் ஆபிரகாம், செயலாளர் மூர்த்தி, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் அடையாள குட்டன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் சிபிஎம் உதகை தாலுகாக்குழு உறுப் பினர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

;