கோவை, ஜூன் 21- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆபத்தான சூழலிலிருந்து இந்திய நாட்டை பாதுகாக்கும் உச்சபட்ச கடமையை ஆற்றுவோர் ராணுவ வீரர்களே. அந்த பணி யிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ஆட் களை எடுக்க ஒன்றிய அரசு துணிந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடியாகும். ஓய்வூதி யம், பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்குப் பின் கைவிடப்படும் வீரர்களின் நிலைமை என்ன ஆகும்? ராணுவ வீரர்களுக்கு இது தான் நிலை என்றால் மற்ற பல துறைக ளிலும் இதைவிட மோசமான நிலை ஏற்ப டுத்தப்படும். இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை. இளம் வயதினரை ஆர்எஸ்எஸ்-ன் ஊழி யர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும். இந்தியா முழு வதும் தங்களது வாழ்வியல் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் வாழ் விடங்களை புல்டோசர் கொண்டு அரசிய லமைப்பு சட்ட மாண்புகளை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மாசேதுங் தலைமை வகித் தார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஜோதி குமார், மாவட்ட செயலாளர் கோபால்சாமி, கோபால் சங்கர், மூத்த வழக்கறிஞர்கள் கே.சுப்பிரமணியன், கே.எம்.தண்டபாணி, எம்.ஆனந்தன், சிவசாமி தமிழன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.