பென்னாகரம், பிப்.2- பென்னாகரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கக் கூடாது என வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், கூத்தப்படி பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஒகேனக்கல். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் மடம் சோதனைச் சாவடி வழியாக வாகனங்களில் செல்கின்ற னர். இச்சாலை மலைச்சாலை என்பதால் அதிக வளைவுகள் நிறைந்த சாலையாக உள்ளது. இச்சூழலில் இங்குள்ள கூத்தபடி பஞ்சாயத்தில் ஜக்கம்பட்டி என்னும் இடத் தில் ஏற்கனவே அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒகேனக்கல் செல்லும் சாலையில் மேலும் ஒரு மதுபான கடை அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மேலும் ஒரு மதுபான கடை அமைந்தால், அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விபத்து களும் அதிகளவில் ஏற்படும் வாய்ப்பு உண் டாகும். ஆகவே, ஒகேனக்கல் செல்லும் வழி யில் எவ்விடத்திலும் மதுபான கடை அமைக் கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் பென்னாகரம் வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.