சூலூர், டிச.15- சூலூரில் அமைக்கப்பட உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற் சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் வியாழனன்று காத்திருப்பு போராட் டத்தை தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் பகு திக்குட்பட்ட வாரப்பட்டி ஊராட்சி யில் டிட்கோ சார்பில் ராணுவ தள வாடங்கள் உற்பத்தி தொழிற் சாலை அமைக்க நிலம் கையகப் படுத்தப்பட்டு வருவதாக வருவதா கக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்க னவே. இப்பகுதியில் சிட்கோ அமைக் கப்படுவதாக எழுந்த தகவலைய டுத்து, பொதுமக்கள் எதிர்ப்பால் சிட்கோ திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அதே இடத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் கூடம் அமையவுள்ள இடத்திற்கு அருகிலேயே பந்தல் அமைத்து அப்பகுதி கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை வியாழ னன்று தொடங்கியுள்ளனர். இதில், தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கு வகித்த, அகில இந்திய விவசாயிகள் சங்க தலை வர் ராகேஷ் தியாகத் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினர்.
அப்பகுதி யைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, அரசு ராணுவ தளவா டம் அமைப்பது தொடர்பான தெளி வான அறிக்கை அளிக்கும் வரை தொடர்ந்து போராட்டமானது நடை பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்ப தற்கு எதிராகவும், உடனடியாக அந்த திட்டத்தை கைவிட வேண் டும் என வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதன்பின் பேசிய அகில இந் திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங் களைப் பற்றி தொழிற்சாலை அமைப்பதற்காக கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு அதிக விலைக்கு விட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. உடலில் உயிர் இருக்கும் வரை நமது மண்ணை யும், நமது பூமியும் காக்க விவசாயி கள் போராட வேண்டும். விவசா யிகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அகில இந் திய விவசாயிகள் சங்கம் உறுது ணையாக இருக்கும் என்று தெரி வித்தார். மேலும், போராட்டத்தில் ஈடு பட்டுள்ள பெண்கள் பேசுகையில், விவசாயத்தையும், விவசாய நிலங் களையும் சீரழிக்கும் திட்டத்தை ஒருபோதும் இப்பகுதி கிராம மக் கள் அனுமதிக்க மாட்டோம். அரசு உடனடியாக இதுகுறித்து நடவ டிக்கை எடுத்து, தெளிவான விளக் கங்கள் கொடுக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம், என்ற னர்.