திருப்பூர், ஆக.25- திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி வட்டம், காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் தொன்மையான நடு கல்லைப் பாது காக்க வேண்டும். இங்கு துணை மின் நிலையம் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தமிழ்நாடு அரசின் தொல்லியல் இணைய தளமான தகவலாற்றுப் படையில், இது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த உயரமான நடுகல் என்று அது குறிப்பிடப்பட்டுள்ளது. நடு கல்லைச் சுற்றி 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு முதுமக்கள் தாழிகள், பானை ஓடு கள், கல்வெட்டுகள், இரும்பு தொழிற் சாலை செயல்பட்டதற்கான ஆதார மாக இரும்பு கசடுகள் ஆகியவை மேற்பரப்பிலேயே காணப்பட்டு வரு கின்றன. இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்து இதுவரை அறிக்கை வெளியிடாமல் இருந்து வருகிறது, திருப்பூர் மாவட்ட நிர்வாக மும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக் காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். அருகிலேயே தமிழ்நாடு மின் தொடர மைப்புக் கழகம் 765 கிலோ வாட் துணை மின் நிலையம் திட்டத்தை அமைப்பதற்கு நிலம் எடுப்பு பணி களையும் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் இங்கு அமைந்தால் நடு கல் எதிர்காலத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே ஒன்றிய, மாநில அரசு களின் தொல்லியல் துறைகள் இங்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக நடுகல் இருக்கும் இடத் தையும், சுற்றியுள்ள பகுதியையும் அறிவித்து பாதுகாப்பு செய்ய வேண் டும். தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும். நடு கல்லுக்கு ஆபத்தாக அமையக்கூடிய துணை மின் நிலை யம் திட்டத்தை அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கை களை வைத்து ஊர் மக்கள் நூறு நாட்களுக்கு மேலாகப் போராடி வரு கின்றனர். 103ஆவது நாளாக வெள்ளி யன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக 2ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள், விவசாயிகள் கலந்து கொண்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழ்நாடு அரசு இந்தப் பகுதியில் துணை மின் நிலையம் திட் டத்தை ரத்து செய்து விவசாயத்தை யும், தொல்லியல் சான்றுகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.