தாராபுரம், மே 26- கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்திற் குட்பட்ட பகுதிகளை தாராபுரம் நக ராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. திருப்பூர் மாவட்டம், கவுண்டச் சிபுதூர் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் செல்வி ரமேஷ் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 வார்டுகளிலும் நிறைவேற்ற வேண் டிய திட்டப்பணிகள் குறித்த 22 தீர்மானங்கள் கொண்டு வரப்பட் டது. இதில் 9 வார்டுகளுக்கும் தலா 20 தெருவிளக்குகள் அமைப்பது, மெட்ரோ சிட்டி உள்ளிட்ட இரண்டு வார்டுகளில் கூடுதல் குடிநீர் மேல் நிலை தொட்டி அமைப்பது உள் ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கிடையே தாராபுரம் நகராட்சிக்கு தேர்தல் முடிந்து நடைபெற்ற முதல் நகர் மன்ற கூட்டத்தில் கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளை தாராபுரம் நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் நாச் சிமுத்து, ஊராட்சி செயலாளர் பெரி யசாமி, மன்ற உறுப்பினர்கள் தன லட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன், புனிதா கார்த்திக், செல்வன், குப்பு சாமி, பாலசுப்பிரமணியம் உள் ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.