சேலம், மார்ச் 30- ஆட்டையாம்பட்டி அருகே கோவிலை விரிவாக்கம் செய்ய ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆட்டையாம் பட்டி பகுதியில் உள்ள செல்லியம் மன் மற்றும் ஐயனாரப்பன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. நூறாண் டுகளை கடந்து மூன்று தலைமு றைகளாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இரு பிரிவுகளாக செல்லியம் மன் மற்றும் ஐயனாரப்பன் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். தற் போது ஐயனாரப்பன் கோவிலில் வழிப டும் ஒரு பிரிவு மக்கள், தங்கள் கோவிலை விரிவுபடுத்த, செல்லியம் மன் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணிகளை செய்து வந்தனர். இதற்காக, செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுவரை இடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு செல்லியம்மன் கோவிலில் வழிபடும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கோவில் நிலம் அரசு புறம் போக்கு நிலத்தில் உள்ளதால், செல்லி யம்மன் கோவில் கட்டுமானப் பணிக் கும் இடம் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அரசு அதிகாரிகள் ஐயனாரப்பன் கோவிலில் வழிபடும் மக்களுக்கு ஆதரவாக பேசி வந்தனர். இந்நிலையில், அரசு அதிகாரி கள் மற்றும் வருவாய்த்துறையின் இந்த ஒருதலைப்பட்ச முடிவை கண்டித்து, செல்லியம்மன் கோவில் கட்டுமானப் பணிகளை விரிவாக்கம் செய்ய ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருவதால், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் இந்திராணி தலை மையில் காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.