கோவை, டிச.25- சூலூரில் செயல்பட்டு வரும் 140 ஆண்டுகள் பழமையான பிரிட் டிஷ் காலத்து சார் பதிவாளர் அலு வலகத்தை இடிக்க எதிர்ப்பு தெரி வித்துள்ள பொதுமக்கள், பழமை வாய்ந்த இக்கட்டிடத்தை அருங் காட்சியகமாக மாற்ற வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூரில் பிரிட்டிஷ் காலத்தில் நில வரை முறை செய்வதற்காக சார்பதிவா ளர் அலுவலகம் 1884 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட் டது. சுமார் 140 ஆண்டுகள் பழமை யான இந்த கட்டிடத்தில், சுற்றுவட் டார கிராம மக்கள் தங்களது இடத்தை வரைமுறை செய்வதற் கும், பட்டா மற்றும் பதிவு மாற்றம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்த னர். இந்நிலையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்களின் கூட்டத் தால் அருகே உள்ள கோவை - திருச்சி தேசிய சாலையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேநேரம், கட்டிட மும் பழமை ஆகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த கட்டிடத்தை வேறு இடத் திற்கு மாற்ற பல்வேறு தரப்பிலி ருந்து அரசுக்கு கோரிக்கை விடுக் கப்பட்டு வந்தது. அதன் அடிப்படை யில், இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டி டம் கட்ட அரசு ஆணை பிறப்பித் துள்ளது. இதற்காக தற்போது சார்ப திவாளர் அலுவலக ஆவணங்கள் தற்காலிகமாக கலங்கல் சாலை யில் உள்ள தனியார் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகி றது. இந்நிலையில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட சார்பதி வாளர் அலுவலக கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும், இந்த கட்டி டம் பிரிட்டிஷ் காலத்து கட்டிடம் என்பதால் இதனை நினைவு சின்ன மாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், பிரிட்டிஷ் காலனி ஆதிக் கத்தில் கோவை இருந்ததற்கு சான் றாக இந்த கட்டிடமும் இருப்பதால் இதனை அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் துகின்றனர்.