districts

img

சுத்தகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

நாமக்கல் பிப்ரவரி 26 நாமக்கல் நகர பகுதிகளான கொசவம்பட்டி ,பாரதி நகர், சத்யா நகர் ,பொன்விழா நகர், ஜெய் நகர், இந்திரா நகர், காமராஜர் நகர் ,ஆண்டவர் நகர் செட்டியார் நகர் ,போன்ற பல்வேறு தெருவுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களை ஒட்டி உள்ள பகுதியில் நாமக்கல் நகராட்சி குப்பைகளை ஆண்டு கணக்கில் கொட்டியதால் மலைபோல் குவிந்து குப்பைகளால் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்பட்டது.இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்து வந்த நிலையில் ,பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை பணிகள் கடந்த வாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றுள்ளது.   இதனையறிந்த அப்பகுதி மக்கள் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் பல நோய்கள் ஏற்படும். எனவே மாற்று இடத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்  அமைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியில் வாழும் 50க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு புகார் மனு அளித்தனர்.