ஈரோடு, மார்ச் 9- அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு புதனன்று முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள் ளம் அணை பாசன விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படை யில், அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தர விட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 33.46 அடி. தற்போது 32.78 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இந் நிலையில், வினாடிக்கு 26 கனஅடி வீதம் 100 நாட்களுக்கு பாச னத்திற்காக பொதுப்பணித் துறையினர் தண்ணீரை திறந்து விட்டனர். இதன்மூலம் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும். முன்னதாக, இந்நிகழ்வில், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் தமிழ் பாரத், விவசாயிகள் சங்க பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.