திருப்பூர், பிப்.13- திருப்பூர் மாநகராட்சி 17வது வார்டு மதசார்பற்ற முற் போக்கு கூட்டணியின் ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன் தேர்தல் பணி மனையை திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான க.செல்வராஜ் வெள்ளி யன்று மாலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரவி, காங் கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் ஊழியர்கள் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.