நாமக்கல், அக்.31- நாமக்கல் மாவட்டத்திற் கான மண்டல அலுவலகம் சேலம் மாவட்டத்தில் செயல் பட்டு வந்த நிலையில், தற் போது நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன் பெறும் வகையில், நாமக் கல்லை தலைமையிடமாக கொண்டு நாமக்கல் மண்டல தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நாமக்கல் நக ராட்சி, சேலம் சாலையில் அமைந்துள்ள எல்எம்ஆர் கட்டிடத்தின் முதல் தளத்தில் புதியதாக அமைக்கப்பட் டுள்ளது. இந்த மண்டல வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் நாமக் கல் மாவட்டத்திலுள்ள 7 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் கரூர் மாவட் டத்திலுள்ள 3 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் செயல்படவுள்ளன. இதனிடையே நாமக்கல் மண்டல தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில், மாநிலங்களவை உறுப்பி னர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் திங்களன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதி வாளர் த.செல்வக்குமரன், வங்கியின் துணைப் பொது மேலாளர் மாதேசன், நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலா நிதி, நகர்மன்ற துணைத்தலைவர் சே.பூபதி, நகர்மன்ற உறுப்பினர் சிவக்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன் மற்றும் கூட்டுறவு சார்பதி வாளர்கள், மண்டல மேலாளர் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிப் பணியாளர் கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.