உதகை, ஜன.5- நடுவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து கேரளம் மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய நிறுத் தமாக நடுவட்டம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையம் முறையான பராமரிப்பு இல்லாமல் காட்சியளித்து வந்தது. எனவே, பேருந்து நிலையத்தை முறையாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி னர். இந்நிலையில், பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடிக் கல் நாட்டப்பட்டது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஆனால், பணி கள் மிகவும் மெத்தனமாக நடந்து வந்தது. இந்நிலையில், கட்டு மான பணிகள் நிறைவடைந்து பேருந்து நிலையம் திறக்கப்பட் டது. சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா, செயல் அலுவலர் பிரதீப் குமார், தலைவர் கலியமூர்த்தி, துணைத்தலைவர் துளசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.