districts

img

சுங்கம், கவுண்டம்பாளையம் மேம்பாலங்கள் திறப்பு

கோவை, ஜூன் 11– கோவை மாநகரின் பிரதான பகுதிகளில் கட்டப்பட்ட சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பகு தியில் உள்ள மேம்பாலங்கள் சனி யன்று, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இத னையொட்டி கோவையில் அமைச் சர் வி.செந்தில்பாலாஜி, பி.ஆர்.நடராஜன் எம்.பி., மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று  கொடியசைத்து மேம்பாலங் களை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு அர்ப்பணித்தனர். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோவையில் ரூ.230 கோடி மதிப் பீட்டில் இராமநாதபுரம் மற்றும் சுங் கம் முக்கிய சந்திப்புகளில் கட்டப் பட்டுள்ள மேம்பாலம் மற்றும் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கவுண்டம் பாளையம் சந்திப்பில் கட்டப்பட் டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சி வாயிலாக சனி யன்று திறந்து வைத்தார். கோவை -  திருச்சி சாலையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட் சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி  மேயர் கல்பனா ஆனந்தகுமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர்.சுதாகர், பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  கு.சண்முகசுந்தரம் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார்,

அம்மன் கே.அர்ச் சுணன், கே.ஆர்.ஜெயராம், வானதி ஸ்ரீனிவாசன், மாநகராட்சி ஆணை யாளர் எம்.பிரதாப், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர்  எம்.சரவணன் மற்றும் அரசு அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர். திருச்சி சாலை, சுங்கம் பகுதி யில் கட்டப்பட்ட மேம்பாலம் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள் ளது. உக்கடம் செல்லும் சாலை யில் கூடுதல் இறங்குதளத்தோடு  இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள் ளது. சுங்கம் மேம்பாலத்தின் மூலம், இராமநாதபுரம், ஒலம் பஸ், சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகளும், சவுரிபாளையம் பிரிவு, புளியகுளம் பிரிவு,  ரேஸ் கோர்ஸ் சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய பகுதிக ளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதோடு, காலவிர யம் தவிர்க்கப்படும். சிங்காநல்லூ ரிலிருந்து அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், நகர் மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடி யும். இதேபோல் கவுண்டம்பாளை யம் சந்திப்பில் ரூ.60 கோடி செல வில் மேட்டுப்பாளையம் சாலை யில் கட்டப்பட்டுள்ளன. கவுண்டம் பாளையம் மேம்பாலத்தின், கவுண்டம்பாளையம் மற்றும் நல் லாம்பாளையம் சாலை சந்திப்பு களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன்மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பா ளையம்,

குன்னூர், உதகை, கூட லூர் மற்றும் மைசூர் செல்லும் வாக னங்கள் எளிதாக செல்ல முடியும். இதன்மூலம் பல்லாயிரக்கணக் கான மக்கள்  மற்றும் வாகன ஓட்டி களும் பயன்பெறுவர்கள். முன்னதாக, அமைச்சர் வி.செந் தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் தமி ழக முதல்வர் இந்த பாலத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த பாலமானது பொதுமக்கள் பயன் பாட்டிற்காக அர்ப்பணிக்கப்படுகி றது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. தொழில் வளர்ச்சிக் காக இது போன்ற பாலங்கள் மற் றும் சாலைகள் அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு பொது பயன்பாட் டிற்கு திறந்து வைத்திருக்க வேண் டும். இருந்தபோதும் காலதாம தம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் உடனடி யாக அதை சரி செய்து தற்போது பயன்பாட்டிற்காக திறந்து வைத் துள்ளார். இதுபோன்ற என்னற்ற வளர்ச்சி திட்டங்களை கோவை மாவட்டத்தில் நிறைவேற்ற தமி ழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய் துள்ளார், என்றார்.