சிவகாசி, மே 12- சிவகாசியில் சிஐடியு- ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தகவல் பலகை திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. சிவகாசி இ.எஸ்.ஐ.கிளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் கே.முத்துக்கண்ணன் தலை மையேற்றார். கிளைச் செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.என்.தேவா தகவல் பலகையை திறந்து வைத் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.முருகன், நகர் செயலாளர் இரா.சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிளைப் பொருளாளர் நவாஸ் நன்றி கூறி னார். இதில் சிஐடியு நிர்வாகிகள் இ. பழனி, பழனிச்சாமி, இருளாண்டி, விஜயலட்சுமி, ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.