கோபி, மார்ச் 14- கோபி அருகே உள்ள அரசு பள்ளியில், சுமார் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடு தல் வகுப்பறை கட்டித்தை, அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் வெங்கடாசலம் திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் பொலவக் காளிபாளையத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் இன்றி மாணவ மாணவிகள் மரத்தின் அடியில் அமர்ந்து படித்து வந்தனர். இதனையடுத்து, பள்ளியில் கூடுதல் வகுப் பறைகள் கட்ட, அந்தியூர் எம்.எல்.ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.44 லட்சத்தை ஒதுக்கினார். இதைத்தொடர்ந்து,கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், பணிகள் முழு வதும் நிறைவுற்று வியாழனன்று திறப்பு விழா நடைபெற்றது. அதில், சிறுப்பு விருந்தி னராக கலந்து கொண்ட வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் புரு ஷோத்தமன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் காளியண்ணன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.