districts

img

சிறை வளாகத்தில் புதிய நூலகம் திறப்பு

சேலம், செப்.1- அஸ்தம்பட்டி சிறை வளாகத்தில் அமைக் கப்பட்ட புதிய நூலகத்தை, சிறைத்துறை கண்காணிப்பாளர் வினோத் திறந்து வைத் தார். தமிழ்நாடு முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வரு கின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை  கூடுதல் காவல் இயக்குநரின் உத்தரவின்  பேரில், சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம் பட்டி சிறை முனியப்பன் கோவில் வளா கத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தை வெள்ளியன்று சிறைத் துறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் திறந்து வைத்தார். இங்கு சிறைத்துறை காவ லர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன் படுத்திக் கொள்ளும் வகையில், போட்டி  தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள்  என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சிறைத்துறை  காவலர்கள் அடுத்த காவல் தேர்வுகள் எழுது வதற்கான புத்தகங்களும் அதிகளவில் இடம்  பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்த கங்களை சிறைத்துறை காவலர்கள் பயன் படுத்திக் கொள்ளுமாறு, சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வினோத் கேட்டுக் கொண்டுள்ளார்.