districts

img

கோவையில் 500 ஆட்டோ நூலகங்கள் திறப்பு

கோவை, ஜன.24- கோவை மாநகர காவல்துறை சார்பில் 500  ஆட்டோ நூலங்களை மாநகர காவல் ஆணை யர் துவக்கி வைத்தார். மக்கள் புத்தகங்களை படிக்கும் பழக்கத் தினை அதிகரிக்கும் வகையில் ஆட்டோவில்  நூலகம் என்ற திட்டம் மாநகர காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் இரண்டாவது நிகழ்வாக 500 ஆட் டோக்களில் நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி  கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத் தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு புத்த கங்கள் மற்றும் அதை வைக்கும் பெட்டி களை வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள்  பயன் பெரும் வகையில் இந்த திட்டம்  கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட் பக்கல்லூரியின் உதவியுடன் செயல்படுத் தப்படுகிறது. இந்த நிகழ்வில் கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல் வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.