மாதர் சங்கம் எதிர்ப்பு சேலம், செப்.29- மேட்டூர் அருகே குடியிருப்பு பகுதி யில் புதிதாக மதுபானக் கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், சித்திரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அந்தி யூர் சாலை, டாக்டர் காடு என்னும் இடத் தில் அரசு மதுபானக் கடை திறப்பதற் கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் மதுபானக் கடை திறக் கப்பட்டால் அப்பகுதி பொதுமக்களுக்கு குறிப்பாக, பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத் தல் ஏற்படும் நிலை உள்ளது. பள்ளி குழந் தைகள் சென்று வரும் பாதையில், மது பானக் கடையை திறக்கப்படுவதால் பெற்றோர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு போதை வஸ்துக்களுக்கு எதிராக வலு வான நடவடிக்கைகளை எடுத்துவரும் இவ்வேளையில், புதிது புதிதாக மது பானக் கடைகளை திறப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானதாகும். ஏற்கனவே, மேற்கண்ட பகுதியில் மது பானக் கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், அதனையும் மீறி தற்போது மதுபானக் கடை அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. எனவே, பொதுமக்க ளின் நன்மை கருதி, மேற்கண்ட பகுதி யில் மதுபானக் கடை அமைக்கும் முயற் சியை கைவிட வேண்டும் என வலியு றுத்தி மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள் ளது.