districts

img

சாலை வளைவில் திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்

தருமபுரி, டிச.26- சாலை வளைவில் திறந்த நிலை யில் உள்ள சாக்கடை கால்வாயால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு, ராஜாபேட்டை, செட் டிக்கரை, சோலைக்கொட்டாய், வெள் ளோலை மற்றும் மொரப்பூர், அரூர் உள் ளிட்ட பகுதிகளில் இருந்து தருமபுரி நகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதி களுக்கு, இருசக்கர மற்றும் நான்கு  சக்கர வாகனங்களில் வருபவர்கள், ராஜாபேட்டையை அடுத்த பெருமாள் கோவில் அருகே உள்ள சாலை வழி யாக, ஆத்துமேடு வழியாக வந்து கீழ் மசூதி தெரு  வழியாக செல்கின் றனர். இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் வளை வில்சாக்கடை கால்வாய் பெரும் பாலான பகுதிகளில் திறந்த வெளியில்  உள்ளது. இதன் காரணமாக, இந்த  சாலை வளைவில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கு வதும் தொடர்ந்து வருகிறது. இதைத்த டுக்க நகராட்சி நிர்வாகம், இப்பகு தியில் திறந்த வெளியில் உள்ள சாக் கடை கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க வேண்டும். வளைவில் வரும்  வாகனங்கள், எதிரே வரும் வாகன ஓட்டி களுக்கு தெரியும் வகையிலான கண் ணாடி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.