உதகமண்டலத்தின் முதன்மை சுற்றுலாத் தலமான ஊட்டி ஏரி 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஜான் சல்லிவன் என்பவரால் 1824 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி ஆகும். மலை ஓடைகள் பாய்ந்து ஊட்டி பள்ளத்தாக்கை அடையும் பாதையில் நீரைத் தேக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள படகு இல்லத்தில் கோடைக்காலமான மே மாதத்தில் படகுப் போட்டிகள் வெகு உற்சாகமாக நடத்தப்படுகிறது. படகு துறை யில் துடுப்பு படகுகள், மிதி படகுகள், மோட்டார் படகுகள் போன்றவை உள்ளன.