districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான ஆசிரியர் ரயிலில் விழுந்து தற்கொலை

திருப்பூர் செப்.10 - திருப்பூரில், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஆசிரியர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து  கொண்டார். திருப்பூர் - ஊத்துக்குளி சாலை கேட்டு தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வெள்ளியன்று 35 வயது மதிக் கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.  சம்பவம் பற்றி அறிந்ததும், திருப்பூர் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் பாபு மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.  இதில் இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த  சாய்குமார் (32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து  தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் சாய்குமார் ஆன்லைன் விளை யாட்டிற்கு அடிமையாகி, அதில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரிலுள்ள தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் தனக்கு பண தேவை என கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளை யாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் திற்கு அடிமையாகிய சாய்குமார் தனக்கு பணம் அனுப்பு மாறும், இல்லையென்றால் ரயில் முன் விழுந்து தற்கொலை  செய்வதாக குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி உள்ளார்.  இந்த நிலையில் பணம் இல்லாத விரக்தியில் திருப்பூர் வந்த சாய்குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது  போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் வன்கொலை: குடும்பத்திற்கு நிவாரணம்

நாமக்கல், செப்.10-  ஜேடர்பாளையத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத் தாருக்கு வனத்துறை அமைச்சர்  மா.மதிவேந்தன் நிவாரண உதவி வழங் கினார்.  நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம்  அருகே பட்டதாரி இளம்பெண் ஒருவர்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இச்சம்ப வத்தில் உண்மை குற்றவாளியை  கண்டறிய சிபிசிஐடி விசாரணை நடத்த  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, விவசாய தொழிலாளர் சங்கத் தினர்  கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதையடுத்து, தமிழக அரசு சிபிசிஐடி  விசாரணைக்கு உத்தரவிட்டது.  இதனிடையே, பரமத்தி வேலூரில்  தொடர்ந்து  சமூக விரோத செயல்  அதிகரித்தது.  இதையடுத்து பரமத்தி  வேலூரில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் கூட்ட அரங்கில்  வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையில், மாவட்ட ஆட்சியர்  ச.உமா முன்னிலையில் நிவாரண நிதி  வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், படுகொலை செய்யபட்ட பெண் ணின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு  ரூ.5 லட்சம்  நிவாரண உதவி வழங் கப்பட்டது.    இந்நிகழ்வில் வனத்துறை  அமைச் சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர்  ச.உமா ஆகியோர் பேசும்போது, இனி  வரும் காலங்களில் எவ்வித கசப்புணர்வும் இன்றி அனைவரும்  ஒற்றுமையாக வாழ வேண்டும்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தை களுக்கு தேவையான உதவிகள்  வழங்கப்படும் என்றனர்.

வரதட்சனை கொடுமை: 3 பேர் மீது வழக்கு

தருமபுரி, செப்.10- அரூர் அருகே வரதட்சனை கொடுமை செய்து வருவதாக  பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், கணவன் உட்பட  3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாருமதி (26). இவருடைய கணவர்  அருண்பாரத் (31). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது வரதட்சணை வேண்டாம் என்று கூறிய அருண்பாரத் குடும்பத்தினர், பின்னர் கார் மற்றும் நகை ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் சாருமதி குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து  வந்தார். இந்நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நடந்ததாக சாருமதி, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் அருண் பாரத் மற்றும் அவருடைய பெற்றோர் தீர்த்தமலை (55), காந்த  ரூபி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கோவையில் ஜூடோ போட்டி  மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை, செப்.10- கோவை சகோதயா பள்ளிகளின் கூட்ட மைப்பு சார்பாக நடைபெற்ற ஜூடோ போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோவை சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பாக 44ஆவது ஆண்டு விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங் களில் நடைபெற்று வருகின்றன. சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் கலை மற்றும் விளை யாட்டு உள்ளிட்ட திறன்களை ஊக்குவிக்கும்  விதமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாணவ, மாணவி களுக்கான ஜூடோ போட்டிகள் கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பெங்கலன் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது. இதில்,கோவை, திருப்பூர் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர். இப்போட்டிகளில் 11,14,17,19 வயதிற்கு உட்பட்ட நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடை பெற்றன. இதில் மாணவ, மாணவிகள் அசத்த லாக தங்கள் திறமைகளை வெளிப்படுத் தினர். இப்போட்டியில்அதிக புள்ளி கள் பெற்ற பெங்கலன் பப்ளிக் பள்ளி  சாம்பியன் பட்டத்தை வென்று  கோப்பையை கைப்பற்றியது.

1677 வழக்குகளுக்கு சமரச தீர்வு

தருமபுரி, செப்.10- தருமபுரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1677 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய மக்கள் நீதி மன்றத்தில், நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2237 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணை முடிவில், 1677 வழக்கு களுக்கு ரூ.10 கோடியே 81 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு  காணப்பட்டது. இதில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், நீதி மன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ரேசன் அரிசி கடத்தல்: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 83 பேர் கைது

ஈரோடு, செப்.10- ஈரோடு சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதத் தில் மட்டும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோடு சரகத்துக்கு உள்பட்ட ஈரோடு, திருப்பூர் மற்றும்  நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்க தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் ஈரோடு சர கத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக 81 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தொடர்புடைய 83 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 23 டன் ரேசன் அரிசி மற்றும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் 10, மூன்று சக்கர வாகனம் 1, நான்கு சக்கர வாகனங்கள் 6 என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. மேலும், அரசு மானியத்தால் வழங்கப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை முறை கேடாக பயன்படுத்தியது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு களில் 20 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 10 பேர் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரோடு சரகத்துக்குட்பட்ட தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் தமிழ்நாடு - கேரளம் மாநில எல்லைப்பகுதியான உடு மலைப்பேட்டை, அமராவதி நகர் ஆகிய சோதனைச்சாவடி களிலும் இரவு, பகலாக போலீசார் வாகன சோதனை நடத் தப்பட்டு வருகிறார்கள். மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க தக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித் துள்ளனர்.

நூற்றாண்டை கடந்த தருமபுரி கிளைச்சிறை
தருமபுரி, செப்.10- ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தருமபுரி கிளைச் சிறைச்சாலை, தற்போது நூற்றாண்டை கடந்துள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தருமபுரி நகரத்தில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கிளைச் சிறை உள்ளது. இச்சிறைச்சாலை கடந்த 1906 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 46 கைதிகள் அடைத்து  வைக்கும் வகையில், இச்சிறைச்சாலை வடிவமைக்கப்பட் டுள்ளது. தற்போது 36 கைதிகள் உள்ளனர். தருமபுரி கிளைச் சிறையில் பெண்களை தங்க வைப்பதில்லை. ஆண்கள் மட் டுமே அடைத்து வைக்கப்படுகின்றனர். அதேபோல், கொலை  குற்றவாளிகளை அடைப்பதில்லை. 117 ஆண்டுகள் ஆகி யும் பழமை மாறாத கட்டடமாக தருமபுரி கிளைச்சிறை உறுதி யாக உள்ளது. இங்கு கைதிகள் படிக்க தினசரி நாளிதழ்கள்,  உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், கைதிகளின் குறைகள் அவ்வவ்போது கேட்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்படுகிறது. தினசரி அரசு மருத்துவர் சிறைக்கு சென்று கைதிகளிடம் உடல்நலம் விசாரிக்கிறார். உடல்நலம் குன்றி இருந்தால், அங்கேயே பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கைதிகளை உறவினர்கள் பார்க்க தின மும் காலை 10 முதல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து அதி காரிகள் கூறுகையில், தருமபுரி கிளைச்சிறை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடம். இதனை முறை யாக பராமரித்து வருகிறோம், என்றனர்.

கொளத்தூர் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சேலம், செப்.10- பல்வேறு புகார் எதிரொலியாக சேலம், கொளத்தூர் காவல் ஆய்வாளரை ஆயுதப்படைக்கு இடமாற்றி சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுப்புரத்தினம். இவர் புகார் மனுக்களை சரிவர விசாரிக்கவில்லை என்றும், சாராய வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார் என்றும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக காவல் உயரதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதன்பின், சேலம் சரக காவல் துறை துணைத்தலைவருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் அறிக்கை அளித்தார். அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் சுப்புரத்தினத்தை, மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மாவட்ட கொடுங்குற்ற தடுப்புப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த தேவராஜ், கொளத்தூர் ஆய்வாளராக நியமித்து டிஐஜி உத்தரவிட்டார்.

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

தருமபுரி, செப்.10- தருமபுரி நெடுஞ்சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறாக ஓடுவதால், தொற்று நோய் ஏற்படும் அபா யம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். தருமபுரி - சேலம் மற்றும் தருமபுரி - கிருஷ்ணகிரியை இணைக்கும் பிரதான சாலையாக நேதாஜி நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கால் வாய் முறையாக தூர்வாரப்படாததால், சமீபத்தில் பெய்த  மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவ திக்கு ஆளாகியுள்ளனர். மேலும், தருமபுரி நகர காவல் நிலை யம் அருகே உள்ள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, சாலையில் செல்வதால் நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்  தூர்வாரப்படாததாலும், சாலைகள் சேதமடைந்துள்ளதாலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போலி டீசல் விற்பனை: 5 பேர் மீது வழக்கு
 

தருமபுரி, செப்.10- பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீசல், ஆயில் விற்ற 5 கடை உரிமையாளர்கள் மீது தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர். தருமபுரி மாவட்டம், தொப்பூரில் சேலம் - தருமபுரி சாலை யில் ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் டிரேடர்ஸ் கடைகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்க ளுக்கு தேவையான ஆயில் மற்றும் உதிரிபாகங்கள் இங்கு  விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள கடைகளில் மும் பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறு வனத்தின் சென்னை அலுவலக மேலாளர் சதீஷ்குமார் (38) மற்றும் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப் போது 5 கடைகளில் வாகனங்கள் தயாரிக்கும் பிரபல நிறு வனத்தின் பெயரில் போலி டீசல், எக்ஸாஸ்ட் ஆயிலை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலி டீசல், எக்ஸாஸ்ட் ஆயிலை விற்பனை செய்து பொது மக்களை ஏமாற்றியதாகவும், அதன் மூலம் வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் சம்பந்தப் பட்ட 5 கடைகள் மீது தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து காப்பிரைட் சட்டம் 1957-விதிகளின்படி சம் பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் சதீஷ்குமார் (32), ராஜா (42), மனோஜ் (27), பாலகிருஷ்ணன் (30), ராஜமாணிக் கம் (73) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, செப்.10- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற் பனைக்கு கொண்டு வரு கின்றனர். இந்த அங்காடிக்கு  சனியன்று 3063 கிலோ பட் டுக்கூடுகள் கொண்டு வரப் பட்டன. இதில் ஒரு கிலோ  பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.665க்கும், குறைந்தபட்ச மாக ரூ.259க்கும், சராசரி யாக ரூ.539.22க்கும் விற் பனையானது. மொத்தம் ரூ.16 லட்சத்து 51 ஆயிரத்து 796க்கு ஏலம் நடைபெற்றதாக அதி காரிகள் தெரிவித்தனர்.