districts

தொடரும் ஆன்லைன் மோசடி: பாதிக்கும் மக்கள்

கோவை, டிச.12- கோவையில் வெவ்வேறு இடங்க ளில் ஆன்லைன் மோசடியில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (65). கல்குவாரி நடத்தும் இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டி வந்துள் ளார். இவரது ஆர்வத்தை தெரிந்து  கொண்டு சில சைபர் கிரைம் மோசடியா ளர்களிடமிருந்து, வெளிநாட்டு வாட்சப் நம்பரில் இருந்து, ரூபி டிரேடிங்கில் முத லீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மெசேஜ் வந்திருக்கின்றது. தொழில் முனைவோரான இவரும், அதனை நம்பி ஆன்லைனில் வர்த்தகம் செய்ய லாம் என நினைத்து ஆரம்பத்தில் சிறு  தொகையை செலுத்தி இருக்கிறார். அதற்கு கணிசமான லாபத்துடன் பணம் டிராஃப்ட் செய்து வந்துள்ளது. பின்னர் சிறப்பு சலுகை முதலீடு என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்திருக்கின்றது. உடனே, எட்டு தவணையாக 1 கோடியே 43 லட் சம் ரூபாயை, அவர்கள் அனுப்பிய லிங் கில் உள்ள வங்கி கணக்கிற்கு கட்டி யுள்ளார்.  ஆறு மாத காலத்தில் நடந்த இந்த பண பரிவர்த்தனையின் அடிப்படையில் பெரும் தொகையை முதலீடாக செய்த  இவர், டிராஃப்டு செய்ய முயன்றுள் ளார். ஆனால் அந்த ஆப்ஷன் பிளாக் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கோவை மாநகர இணையவழி குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆன் லைன் முதலீட்டு என்ற பெயரில் மோசடி யில் ஈடுபட்ட சைபர் கிரைம் குற்றவாளி கள், 1 கோடியே 43 லட்சம் ரூபாய் பணத்தை நூதன முறையில் லாவக மாக பறித்துச் சென்றுள்ளனர்.  இதேபோன்று, கோவை வைசியாள் தெருவை சேர்ந்த கோபால்(74) என்பவ ருக்கு, வீட்டு மின் இணைப்புக்கு கட்ட ணம் கட்டவில்லை என அழைப்பு வந் துள்ளது. மேலும், விரைவில் கட்ட வில்லை என்றால் உங்களது மின்  இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரித்ததாக தெரிகிறது.

இதனைய டுத்து, எதிர்முனையில் பேசியவர், உங் களது வங்கி கணக்கு விவரங்களை கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரி வித்துள்ளார். இதனை நம்பிய கோபால் தனது வங்கி கணக்கு விவரங்களை கூற, கூடவே செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பகிர்ந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து வெவ்வேறு கட்டங் களாக ரூ. 8.10 லட்சம் பணம் எடுத்து மோசடி நடந்துள்ளது. இதனால் அதிர்ச் சியடைந்த கோபால் இதுகுறித்து கோவை  மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார்  அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல, கோவை காளப்பட்டி நேரு நகரைச் சேர்ந்த வித்யா(46) என்ற  பட்டதாரி பெண், ஆன்லைன் வேலைக்கு முயற்சி செய்து வந்தார். கடந்த மாதம் டெலிகிராம் குழு மூலம் ஒரு பெண் வித் யாவை தொடர்பு கொண்டு, ஆன்லைன் மூலம் விமான டிக்கெட் புக் செய்து  கொடுத்தால் உங்களுக்கு அதிக கமி ஷன் தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது ஆசை வார்த்தைகளை நம்பிய வித்யா, அந்த பெண் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.29.30 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. மீண்டும் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இத னால் ஏமாற்றமடைந்த வித்யா கோவை  மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார்  அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் வெவ்வேறு இடங்க ளில் ஆன்லைன் மூலம் மோசடி நடை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.