districts

img

காலமானார்

ஈரோடு, ஜன. 12- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், டிஆர்இ சங்கத் தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர்  வைத்தியநாதனின் இணையர் ஈரோட்டில் வெள்ளியன்று காலமானார். ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் தோழர் வைத்தியநாதன். தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனிய னில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்திய வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஈரோடு நகரத்தில்  துவக்க காலத்தில் கட்டுவதற்கு முன்னணியில் நின்றவர்.  டிஆர்இயு செயலாளராக இருந்தபோது 1974 பேராட்டத் தினை நடத்தியதில் தலைமை வகித்தவர்களில் முதன்மை யானவர். தோழர் வைத்தியநாதன் கடந்த சில வருடங்க ளுக்கு முன்பு காலமானார். இவரின் பொது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த தோழர் வைத்தியநாதனின் இணை யர் லட்சுமி, வெள்ளியன்று மூலப்பாளையத்திலுள்ள இல்லத் தில் காலமானார்.  அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.பழனிச்சாமி, ஆர்.கோமதி, சி.முரு கேசன், தாலுகாச் செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட் டக்குழு உறுப்பினர் பா.லலிதா மற்றும் மூத்த தோழர் கே.துரைராஜ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலியையும், அவரது உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தனர்.