போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
இளம்பிள்ளை, ஜூலை 28- ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளை ஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (18), என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இளைஞர் திரும ணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை கர்ப்பமாக்கியுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவர இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளைஞரை போலீ சார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும், குழந்தை திருமண சட்டத்தின் கீழ் உறவினர் கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சகதி நிரம்பிய அணைகளை தூர்வார முடிவு
உதகை, ஜூலை 28- நீலகிரி மாவட்டத்தில் உள்ள சகதி நிரம்பிய அணைகளை தூர்வார மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. நீலகிரியில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ் 13 அணைகள் உள்ளன. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்துவிட்டன. நீலகிரி அணைகளில் இருந்து, 833.65 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. குந்தா, கெத்தை, பில்லூர் அவலாஞ்சி அணைகளில் தண் ணீரை தேக்கி வைத்து, ராட்சத குழாய்களில் கொண்டு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சகதி நிறைந்த அணைகள் துார்வாரப் பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பருவ மழை யின் போது, ஏராளமான நீர் வீணாக வெளியேறுகிறது. சேறும், சகதியுமான அணைகளை உடனடியாக துார்வார வேண்டி இருப்பதால், மின்வாரிய தலைமை அலுவலகம் இதற்கான அறிக்கையை கேட்டுள்ளது. இதுகுறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில்ராஜன் கூறுகையில், குந்தா, பைக்காரா நீர் மின்திட் டத்தின் கீழ், அதிகளவில் சகதி நிரம்பிய அணைகளை துார் வார மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வாரியத்துக்கு விரைவில் அனுப் பப்படும், என்றார்.
சாலை விபத்தில் எம்எல்ஏ காயம்
ஈரோடு, ஜுலை 28- அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் சென்ற கார் விபத்துக் குள்ளானது. இதில் எம்எல்ஏ காயமடைந் தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நல வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் புதனன்று செஸ் ஒலிம்பி யாட் நிகழ்ச்சியில் பங்கேற்க ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற் காக அந்தியூரிலிருந்து பவானி வழியாக ஈரோட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். பவானி அருகே வாய்க்கால் பாளையம் பகுதி யில் கார் வந்து கொண்டிருந்த போது கார் ஓட் டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எம்எல்ஏ ஏஜி.வெங்கடாசலம் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதைய டுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். பின்னர் கோவையிலுள்ள தனியார் மருத் துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை - போக்குவரத்து சிக்னல்களில் இசை
கோவை, ஜூலை 28- கோவையில் உள்ள போக்குவரத்து சிக் னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒலிப் பெருக்கி மூலம் போக்குவரத்து விதிமுறை கள் மற்றும் இசை கரோக்கிகள் ஒலிக்கும் முயற்சியை கோவை காவல் துறை முன்னெ டுத்துள்ளது. கோவை மாநகரில் மிக முக்கியமான ஒரு சந்திப்பு லட்சுமி மில்ஸ். அவிநாசி சாலையில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து கோவை யின் நான்கு திசைகளுக்கும் பயணம் செய்ய லாம். எப்போதும் வாகன போக்குவரத்து இந்த இடத்தில் அதிகமாக இருப்பதால் லட் சுமி மில்ஸ் சிக்னல் கோவை மாநகரில் பெரிய போக்குவரத்து சிக்னலாக உள்ளது. இந்த போக்குவரத்து சிக்னலில் கோவை மாநகர காவல் துறையினர் புதுமையான முயற் சியை மேற்கொண்டுள்ளனர். சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையோடு போக் குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபரப்பப்படுகின் றன. இந்த ஒலிபெருக்கிகள் மூலமாக பாதசா ரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள் குறித்தும், சாலை விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வரு கிறது. சாலையில் சிக்னலில் நிற்கும் போது இந்த மெல்லிசைகள் ஒருவித அமைதியைத் தருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிக்னலில் பாதசாரிகள் சாலையை கடப்பதில் சிரமம் நீடித்து வந்த நிலையில், பாதசாரிகள் சாலையை எளிதில் கடக்கும் வித மாக அவர்களுக்காக பிரத்தியேக சிக்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. பாதசாரிகளை வழிமு றைப்படுத்த போக்குவரத்து காவல் துறையி னர் மற்றும் ஊர்காவல் படையினர் நியமிக்கப் பட்டுள்ளனர். சோதனை அடிப்படையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இந்த முறை அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து கோவை மாநகரின் அனைத்து சிக்னல்களி லும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
தம்பியை கொன்ற அண்ணணுக்கு ஆயுள்
கோவை, ஜூலை 28- கோவை உக்கடம் பகுதி யில் செல்வராஜ் என்பவர் தனியாக வசித்து வந்துள் ளார். இவரது அண்ணன் சுப்பிரமணி ஹைதராபாத் தில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 2021-ல் கோவை வந்து தம்பியுடன் இனைந்து வசித்துள்ளார். இந்நிலையில், 2021 அக் டோபரில் இரவு மது போதை யில் வந்த செல்வராஜ் மற் றும் சுப்பிரமணி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சுப்பிரமணி செல்வ ராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை நிறைவ டைந்து, சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டணை வழங்கப் பட்டது.
மாணவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்
திருப்பூர், ஜூலை 28 - திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களிடம் தினந்தோறும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்த சிறுவர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் ராயபுரம் பகுதியில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத் திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதி களில் இருந்து வரும் சிறுவர்கள் மற்றும் இப்பள்ளியில் பயின்று வெளியே சென்றவர்கள் என கும்பலாக ஒன்று சேர்ந்து பள்ளி மைதானத்திற்குள் அடிக்கடி வந்து அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் ஈடுபட்டு வந்தவர்கள் குறித்து ஆசிரியர் கள் பலமுறை எச்சரித்தும் இதே செயலை அந்த கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனையடுத்து புதன்கி ழமை சில சிறுவர்களைப் பிடித்த ஆசிரியர்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின்பே ரில் அங்கு வந்த காவல்துறையினர் சிறுவர்களிடம் விசா ரணை நடத்தி, எச்சரிக்கை செய்தனர். அத்துடன் அவர்கள் பெற்றோர்களை வரவழைத்து விசாரனை மேற்கொண்டனர்.
தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை மாநாடு
திருப்பூர், ஜூலை 28 - தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க திருப்பூர் கிளைகளின் ஏழாவது மாநாடு செவ்வாயன்று திருப் பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. ப.செந்தில்குமார், ஜி.கனகராஜ் ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற மாநாட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சண் முகசுந்தரம் தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் எம்.சையத் இத்ரீஸ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ், ஓய்வுபெற்றோர் கிளைச் செயலாளர் கே.விஸ்வநாதன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர்கள் என்.குமரவேல், ஏ.சங்கிலிதுரை ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பிஎஸ்என்எல் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர் சம்பள நிலுவையை உட னடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதில் மெயின் கிளை தலைவராக ஏ.ரமேஷ், செயலா ளராக ப.செந்தில்குமார், பொருளாளராக கே.சுப்பு, வெளிப்பு றக் கிளைத் தலைவராக கே.பழனிசாமி, செயலாளராக சி. துரைசாமி, பொருளாளராக வி.முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒப்பந்த ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். வெளிப்புற கிளைச் செயலாளர் சி. துரைசாமி நன்றி கூறினார்.
செல்லப்பபுரம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர், ஜூலை 28– திருப்பூர் மாநகராட்சி செல்லப்பபுரம் மாநகராட்சி நடுநி லைப் பள்ளியில் திங்களன்று இந்திய குடியரசுத் தலைவர் கள் வாழ்க்கை வரலாறு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. மங்கை பாரதி தகவல் மையம் பதிப்பக நிறுவனர் அ.கந்தசுவாமி தலைமை தாங்கி வரவேற்றார். தலைமை ஆசிரியை வி.புவனேஸ்வரி முதலவது இந்திய குடி யரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தொடங்க தற்போ தைய புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரை உள்ளவர்களின் வாழ்க்கை வரலாறு, பணியாற்றிய காலம் குறித்து எடுத்துரைத்தார். அனைத்து குடியரசுத் தலைவர்கள் விபரம் பார்வைக்கு வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் இந்த விபரங்களைப் பார்த்து பயனடைந்தனர். உதவித் தலைமை ஆசிரியை ஏ.சுமதி நன்றி கூறினார்.
இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
அவிநாசி, ஜூலை 28- அவிநாசி அருகே தெக்கலூரில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் புத னன்று கைது செய்யப்பட்டார். அவிநாசி அருகே தெக்கலூர் பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை, முருகேசன் (26) என்பவர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021 டிச.26 ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொ டுமை செய்துள்ளர். இதையறிந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்த ரவின் படி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகேசன் குண் டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட் டார்.
உடுமலையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
திருப்பூர் ஜூலை 28- உடுமலை நகராட்சியில் விதி மீறி வைக் கப்பட்ட பேனர்களை நகராட்சி நிர்வாக ஊழி யர்கள் அகற்றினார்கள். திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி யில் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தளி சாலை, தாராபுரம் சாலை சந்திப்பு பகுதிகளில், விதிமீறி ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன.இதனால் சாலைகள் முற்றிலும் மறைக்கப்படுகிறது.எதிரே வரும் வாகனங் கள் தெரியாமலும், கவனச்சிதறல் காரணமா கவும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர் கள், காற்றுக்கு தாங்காமல் பொதுமக்கள், வாகனங்கள் மீது விழுந்தும் விபத்தை ஏற்ப டுத்தி வருகிறது. இந்நிலையில் விதி மீறல் பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியு றுத்தி வந்த நிலையில், நகராட்சி சார்பில் அனு மதியற்ற பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட் டன. பேருது நிலையம், அனுஷம் சாலை, பைபாஸ் மற்றும் கால்நடை மருத்துவ மனையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி சுகா தாரப்பிரிவு அலுவலர்கள், ஊழியர்கள் அகற் றினர். நகராட்சி சார்பில், பேருந்து நிலை யத்தை சுற்றிலும் இருந்த பிளக்ஸ் பேனர் கள் மட்டும் அகற்றப்பட்டன. தளி சாலை, தாராபுரம் சாலை பொள்ளாச்சி சாலை, கொல் லன் பட்டறை, பழநி சாலை உள்ளிட்ட பகுதிக ளில், இன்னும் அதிக அளவு பிளக்ஸ் பேனர் கள் அகற்றப்படாமல், ஆபத்தான முறையில் உள்ளன. அவற்றையும் முழுமையாக அகற்ற அதிகாரிகள் முன் வர வேண்டும் என மக்கள் கூறினர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறு கையில்: பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.விதி மீறி கட்டடங்கள் மீதுள்ள விளம்பரத்தட்டிகளையும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 30 ஆம் தேதிக்குள் பிளக்ஸ் பேனர்கள், ரோடுகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம் பர தட்டிகள், ஆக்கிரமிப்புகள் என அனைத் தும் அகற்றப்படும் என்றனர்.
பிள்ளைகளுக்கு கொடுத்த நிலத்தை மீட்டுகொடுக்க முதியவர் வலியுறுத்தல்
திருப்பூர், ஜூலை 28- திருப்பூர் மாநகரில் பிள்ளைகளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுத்த நிலையில் அவர்கள் தன்னை கைவிட்டு விட்டதாக முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தார். திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி மொரட்டுப்பாளை யத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். (வயது70). இந்த முதிய வர் தனது பூர்வீக நிலம் 7½ ஏக்கர் நெருப்பெரிச்சலில் உள்ளதா கவும், அதன் மதிப்பு ரூ.20 கோடி என்றும் கூறுகிறார். இந்த நிலத்தை இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோ ருக்கு சில நாட்களுக்கு முன்பு பாகம் பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் தன்னை கண்டு கொள்ளாமல் நடுரோட்டில் விட்டு விட்டதா கவும், அதனால் நான் உண்ண உணவின்றி தவித்து வரு வதால், பாகப்பிரிவினை செய்து வைத்த ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும், அந்த நிலத்தை மீண்டும் தனக்கு ஒப்ப டைக்க வேண்டும் எனக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:28.69/60அடி
நீர்வரத்து:46கன அடி
வெளியேற்றம்:27கன அடி
மழையளவு: 48மிமீ
அமராவதி அணை
நீர்மட்டம்: 88.62/90அடி.
நீர்வரத்து:1385கனஅடி
வெளியேற்றம்:1312கன அடி
மழையளவு: 38மிமீ
பல்லடம் அருகே கொலை: குற்றவாளிகள் இருவர் கைது
திருப்பூர், ஜூலை 28- பல்லடம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் பற்றி வழக்கு பதிந்த போலீசார், குறுகிய நாட்களில் விசாரணை செய்து அந்த நபரை கொலை செய்த குற்றவாளிகள் இருவரை கைது செய்தனர். பல்லடம் தாராபுரம் சாலையில் அஸ்வதி கேஸ் குடோன் பின்புறம் கடந்த 12ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருந்தது. இதுகுறித்து மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். அழுகிய நிலையில் சடலம் மீட் கப்பட்டதால், முதலில் சந்தேக மரண வழக் காக பதிவு செய்யப்பட்டு இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டு கடந்த 22 ஆம் தேதி, இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மேற் கொண்ட புலன் விசாரணையில் அடை யாளம் தெரியாத இறந்த நபர் திருப்பூர் தட் டான் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆறுமு கம் (45) என்பது கண்டறியப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் இவரது சகோதர முறை உறவினர்கள் பால முருகன் (40), முத்துவேல் (37) ஆகியோர் கட் டையால் தாக்கி ஆறுமுகத்தை கொலை செய் தது தெரியவந்தது. இந்த குற்றவாளிகள் இருவரையும் புதன் கிழமை பல்லடம் காவல்துறையினர் கைது செய்தனர்.அடையாளம் தெரியாத நிலை யில் சடலம் கண்டறியப்பட்டு கொலை செய் யப்பட்டதை உறுதிப்படுத்தி குற்றவாளி களை 15 நாட்களில் கைது செய்த பல்லடம் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சசாங் சாய் பாராட்டு தெரிவித் தார்.
பூட்டிக்கிடக்கும் சித்த மருத்துவ பிரிவு
பொள்ளாச்சி, ஜூலை 28- பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் பூட்டிக்கிடக்கும் சித்த மருத்துவப்பிரிவை 24 மணி நேரமும் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வரு கிறது. இம்மருத்துவமனை கடந்த 2009 ஆம் ஆண்டில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மருத்துவமனைக்கு வால்பாறை, ஆனைமலை, கிணத் துக்கடவு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலி ருந்து உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளும் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2005 -2006 ஆண்டில் பொதுப்பணித்துறையின் நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப் பீட்டில் சித்த மருத்துவ பிரிவு மையம் அமைக்கப்பட்டது. இதற்கென சித்த மருத்துவரும் பணியமர்த்தப்பட்டனர். சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட இந்த சித்தமருத்துவ பிரிவு தற்போது செயல்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. டெங்கு, கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்று காலங் களில் இந்த பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துகளை வாங்கி சென்றனர். மிக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த சித்த மருத்துவப் பிரிவு சில மாதங்களாக பகுதிநேரமாக குறைக் கப்பட்டு, தற்போது முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவத்தை நாடி வரும் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, மேற்கண்ட சித்த மருத்துவப்பிரிவு பொதுமக்களின் நலன் கருதி முழுநேரமாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல்
உதகை, ஜூலை 28- நீலகிரி மாவட்ட ஆட்சியரின் தொலைபேசிக்கு குறுந்தக வல் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட ஆட்சியரான அம்ரித்தின் செல்போ னுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குறுந்தகவல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத்தை ஆட்சி யர் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இதையடுத்து உடன டியாக மாவட்ட முழுவதும் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இத னையடுத்து, மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளி லும் வாகன ஓட்டிகளிடமும், ஹோட்டல்கள், தங்கும் அறை களில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மேலும், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த எண்ணை கொண்டு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக மிரட்டல் விடுத்தார்? என்று குற்றப்புலனாய்வு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ஈரோடு வாலிபர்களிடம் என்ஐஏ விசாரணை
ஈரோடு, ஜூலை 28- ஈரோட்டில் பிடிபட்ட இரண்டு இளைஞர் களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு, திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப் பில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரிகள் கடந்த ஜூலை 24 ஆம் தேதியன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர் பில் இருந்ததாக அக்தர் உசேன் லஸ்கர் என் பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத் திய விசாரணையில், சேலத்தில் அப்துல் அலி ஜூபா என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை யின்போது அவர் கொடுத்த தகவலின் அடிப் படையில், என்ஐஏ அதிகாரிகள் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு முழுவதும் சோதனை மேற் கொண்டனர். அங்கிருந்த 5 பேர் கொண்ட குடுபம்பத்தில், சந்தேகப்படும்படி இருந்த 2 இளைஞர்களை மட்டும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள காவல் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்கள் 2 பேரிடமிருந்து பறிமுதல் செய் யப்பட்ட கைப்பேசிகள், மடிக்கணினி, டைரி கள், சிம் கார்டுகள், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசி மோகன், துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீஸ் அதிகாரி கள் விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்ப வம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்தடை
சேலம், ஜூலை 28- சேலம் மாவட்டம், உடை யாப்பட்டி துணைமின் நிலை யத்துக்கு உட்பட்ட கிருஷ் ணாநகர் பகுதியில் மின்சார பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, குமரகிரிபேட்டை, கிருஷ்ணாநகர், அம்மா பேட்டை காவல் நிலையம், ஜோதி தியேட்டர், குண்டு பிள்ளையார் கோவில் தெரு, 40 அடி ரோடு, வட்டார போக் குவரத்து அலுவலகம், நாம மலை அடிவாரம், குமரகிரி அடிவாரம், ராயல் பார்க் பள்ளி, பெரிய கிணறு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
தீ விபத்து
சேலம், ஜூலை 28- சேலம் மாவட்டம், எருமா பாளையம் பகுதியில் ஒரு லாரி பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் லாரியின் பெட் ரோல் டேங்கை வெல்டிங் எந்திரத்தால் உடைத்த போது, அதில் இருந்த பெட் ேராலில் தீ பிடித்து, அங்கி ருந்த பொருட்கள் மீது பரவி யது. இதுகுறித்து தகவல றிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இவ்விபத் தில், பட்டறை ஊழியர் பங்கு ராஜ் (45) உயிரிழந்தார். இது குறித்து கிச்சிப்பாளையம் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
உதகை: விதிகளை மீறி எழுப்பப்பட்ட கட்டிடத்திற்கு சீல்
உதகை, ஜூலை 28- உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப் பட்ட தனியார் வணிக வளாகத்தில், செயல் பட்டு வந்த உணவகம் உட்பட 14 அலுவல கங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிர்காலத்தில் இயற் கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகை யிலும் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறை கள் உள்ளன. குறிப்பாக, 1993 ஆம் ஆண்டு பிரதான வரைப்படத்தின்படி (மாஸ்டர் பிளான்) சட்டப்படி 21 அடிக்கு மேல் கட்டி டங்கள் கட்டவும், 30 டிகிரி சரிவான பகுதி களில் கட்டிடங்கள் கட்டவும் தடை விதிக்கப் பட்டது. இதன் பின்னர் நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட வேண்டும் என் றால் நகராட்சி நிர்வாகத்தில் மட்டும் அல்லா மல் வனத்துறை, புவியியல் துறை, வேளாண் பொறியியல் துறை உள்பட பல்வேறு துறை களில் அனுமதி வாங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இவ்வாறு கட்டிடங்கள் கட்ட விதிமுறைகள் அதிகமாக இருப்பதால் அதை பின்பற்றாமல் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டிங்கள் கட்டப்பட்டன. இதன்படி 1993 ஆம் ஆண்டுக்கு பிறகு விதிமுறைகளை மீறி 1337 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ள தாக கணக்கெடுக்கப்பட்டது. இவ்வாறு விதி முறை மீறி கட்டப்பட்ட பல கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டு கேசினோ சந்திப்பு பகுதியில் விதிமுறை களை மீறி 4 தளங்களுடன் தனியார் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொ டர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் அந்தக் கட்டி டத்திற்கு சீல் வைத்தனர். ஆனால், தனியார் வணிக வளாகத்தினர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம், விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அந்த கட்டிடத் திற்கு சீல் வைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நட வடிக்கை எடுத்தனர். அப்போது 4 ஆவது தளத்தில் வழிபாட்டு தளம் இருந்ததால், பேச்சு வார்த்தை நடத்தி சீல் வைக்கப்படவில்லை. தரைத்தளத்தில் இருந்த கடைகளுக்கு மட் டும் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில் நகர அமைப்பு அதி காரி ஜெயவேல், நகரமைப்பு திட்ட ஆய்வா ளர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் வியாழனன்று வணிக வளாகத்திற்கு வந்த னர். அங்கு முதல் தளத்தில் உள்ள பிரபல உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதே போல் அந்த வணிக வளாகத்தில் இருந்த 14 அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. அங்கு இருந்த தனியார் நிதி நிறுவனம் மட் டும் அலுவலகத்தை காலி செய்ய, அடுத்த மாதம் வரை அவகாசம் வாங்கி இருப்பதால் நிதி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட வில்லை. இதேபோல் உதகையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட பல்வேறு கடைகள் மற்றும் கட்டி டங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.