கோவை, அக்.1- கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பில் ஓணம் விழா கொண்டாட்டம் ஞாயிறன்று தனியார் திருமண மண்டப வத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சி.பிரபாகரன் வரவேற் றார். க.ராமகிருஷ்ணன், கே.சந்தோஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தேசிய விருது பெற்ற திரைப்பட பின்னனி பாடகி நஞ்சம்மா, குழந்தை நட்சத்திரமான தீர்த்தா சுபாஷ் ஆகி யோர் கௌரவிக்கப்பட்டனர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பாலக்காடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.என். கிருஷ்ண தாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் வாழ்த்துரையாற் றினர். தமிழ்நாடு மலையாளி அசோசியேசன் தலைவர் எம்.கே. சோமன் மேத்யூ, கோவை மலையாள சமாஜம் தலைவர் கே.கே.ராமச் சந்திரன், கேரள கிளப் தலைவர் டி.ஆர். அசோக், சிஎம்எஸ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் கே.ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திருச்சூர் ஜனநாயக குழு வினரின் நாட்டுப்புற பாடல், கலாச்சார நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பி.சந்திரன் நன்றி கூறினார். இந்நிகழ்வுகளை என்.ஆர்.முருகேசன், என்.ஜாகீர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.