தருமபுரி, மே 7- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு, சனியன்று தருமபுரி, ஈரோட்டில் கருத்தரங்கம் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு அமைப்பு தினம் சனியன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தரும புரி சிஐடியு அலுவலக கூட்டரங்கில் கருத் தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளி நாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் ஏ.சேகர் வரவேற்றார். “போராட்டங்கள் பலமானால் மட்டுமே உரிமைகள் நம் வச மாகும்” என்ற தலைப்பில் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் கோ.பழனியம்மாள், தமிழ்நாடு நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் பெ.பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர்கள் சி.காவேரி, டி.சண்முகம், ஜி. குணசேகரன், பி.சங்கர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆர்.ஜெயவேல், பெ.மகேஸ் வரி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இதில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண் டும். பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். அரசாணை 115, 139 மற்றும் 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளில் உள்ள சுமார் 6 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தலைவர்கள் உரையாற்றினர். இதற் கிடையே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவ லகங்கள் முன்பு கொடியேற்று விழா நடை பெற்றது. இதில், ஏராளமான அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு
இதேபோல ஈரோடு மாவட்டம், கூடலிங் கம் திடலில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அமைப்பு தின கருத்தரங்கம் சங்கத்தின் மாவட்ட தலைவர் எ.ராக்கிமுத்து தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ச. விஜயமனோகரன் வரவேற்றார். “போராட்டங் கள் பலனால் மட்டுமே உரிமைகள் நம் வச மாகும்” என்ற தலைப்பில் மாநிலச் செயலா ளர் அண்ணா.குபேரன், “அரசின் நிலைப் பாடும், நமது எதிர் காலமும்” என்ற தலைப் பில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.திருமுருகன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். இதில் சங்கத் தின் மாவட்ட பொருளாளர் சுமதி உள்ளிட்ட திர ளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.