districts

img

செப்.10 ஆம் தேதி போராட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

நாமக்கல், ஆக.19- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.10 ஆம் தேதியன்று பரமத்திவேலூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ள தென மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், பரமத்திவேலூர் தாலுகாகுழு அமைப்பு மாநாடு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி பேரூராட்சி சமூக கூட் டரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் நாகேஸ்வரி, குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டை துவக்கி வைத்து மாநிலப் பொருளா ளர் கே.ஆர்.சக்கரவர்த்தி சிறப்புரையாற்றினார். இம்மா நாட்டில், 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ச்சியாக நூறு நாட்களும் வேலை வழங்கிட வேண்டும். பேரூ ராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம் பர் 10 ஆம் தேதியன்று பரமத்திவேலூர் வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்து வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய தாலுகாக்குழு தலைவராக நாகேஸ்வரி, செயலாளராக குணசேகரன், பொருளாளராக ஆனந்த் மற்றும் 8 தாலுகாக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் பேசினார். இதில் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் ஏ.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.