ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து
ஈரோடு, மார்ச் 18- ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 14 பேர் சிறு காயங் களுடன் தப்பினர். உதகை இருந்து வெள்ளியன்று இரவு கர்நாடக மாநில தனியார் ஆம்னி பேருந்து பெங்களூருக்கு புறப்பட்டது. இப் பேருந்தில் 13 பேர் பயணம் செய்தனர். பேருந்தை பெங்களூ ருவை சேர்ந்த ரவி (42) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்து ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தை அடுத்துள்ள பெரிய கள்ளிப்பட்டி வழியாக சென்று கொண்டு இருந்தது. தொடர்ந்து அந்த பேருந்து சத்தியமங்கலம்- உதகை மெயின் ரோடு பெரிய கள்ளிபட்டி சோதனை சாவடி அருகே வெள்ளி யன்று நள்ளிரவு 1 மணியளவில் சென்று கொண்டு இருந்த போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் தூக் கத்தில் இருந்த பயணிகள் என்ன என்று தெரியாமல் அலறினர். இதில், பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட 14 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதை பற்றி தகவ லறிந்த பவானி சாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து காயமடைந்தவர்களை ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதை போலீசார் சரி செய்தனர். இது குறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வரி விதிப்பு விண்ணப்பங்கள் முறைப்படுத்த சிபிஎம் கவுன்சிலர்களிடம் ஆணையர் உறுதி
அவிநாசி, மார்ச் 18- திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்து மக்கள் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தனர். திருமுருகன் பூண்டி நகராட்சியில் புதிய வரி விதிப்பில் முறைகேடு நடப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டு தினங்களுக்கு முன்பாக நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நி லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன் பூண்டி நகராட்சி கிளைகளின் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி ஆணையரை சந்தித்தனர். அப்போது அவர் தெரிவிக்கையில், புதிய வரி விதிப்பு கோரி பெறப்படும் விண் ணப்பங்களுக்கு ரசீது வழங்கப்படும், பெற்ற விண்ணப்பங் கள் வரிசைப்படி பதிவு செய்யப்படும், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உப்பு தண்ணீர் பிரச்சனை விரைவில் தீர்க்கப் படும் என்று தெரிவித்தார்.அவிநாசி, மார்ச் 18- திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்து மக்கள் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தனர். திருமுருகன் பூண்டி நகராட்சியில் புதிய வரி விதிப்பில் முறைகேடு நடப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டு தினங்களுக்கு முன்பாக நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நி லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன் பூண்டி நகராட்சி கிளைகளின் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி ஆணையரை சந்தித்தனர். அப்போது அவர் தெரிவிக்கையில், புதிய வரி விதிப்பு கோரி பெறப்படும் விண் ணப்பங்களுக்கு ரசீது வழங்கப்படும், பெற்ற விண்ணப்பங் கள் வரிசைப்படி பதிவு செய்யப்படும், ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உப்பு தண்ணீர் பிரச்சனை விரைவில் தீர்க்கப் படும் என்று தெரிவித்தார்.
ரூ 1.5 கோடி மதிப்பு நகராட்சி இடம் மீட்பு
உடுமலை, மார்ச் 18 – உடுமலைபேட்டை நக ராட்சிக்கு சொந்தமான ரூ. 1.50 கோடி மதிப்புள்ள பொது பயன்பாட்டு இடம் மீட்கப்பட் டது. உடுமலை நகராட்சி எல் லையில் திருப்பூர் சாலை அருகே அர்பன் பாங்க் லே அவுட் என்ற பெயரில் நகர ஊரமைப்பு துறையால் ஒப்பு தல் அளிக்கப்பட்ட மனை பிரிவு உள்ளது. இங்கு மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் பொது பயன்பாட் டிற்கு என 10.50 சென்ட் இடம் பூங்காவிற்காக ஒதுக்கப்பட் டது. பூங்கா பயன்பாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை மனைப்பிரிவு உரி மையாளர் நகராட்சிக்கு ஒப்ப டைக்காமல் விற்பனை செய்ய முயல்வதாக புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வியாழயன்று நகராட்சியால் கையகப்படுத் தப்பட்டது. உடுமலை நகராட் சியால் மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி என தெரிவிக்கபட்டுள் ள்ளது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:39.65/60அடி நீர்வரத்து:485கன அடி
வெளியேற்றம்:119கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:51.87/90அடி.நீர்வரத்து:120கனஅடி
வெளியேற்றம்:110கனஅடி
இளம் பெண்களை அணிதிரட்டுவோம் !
பெண்களின் சமூக நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை அளவிட முடியும். – காரல் மார்க்ஸ் சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்கள் உரிமைகளை பெறுவதிலும் வாய்ப்புகளை பெறுவதிலும் சரிபாதியாக உள்ளார்களா? அதற்கான பதில் இல்லை என்பதாகவே அமையும். நாகரீக சமூகத்தில் அத்தகைய நிலையை உருவாக்க வேண் டிய அரசுகள் பாராமுகத்துடனே உள்ளது. பாஜக தலைமையிலான மோடி அரசு அமைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் நிறைவேற் றப்படவில்லை. அதற்கான அக்கறை யின்மையோடே மோடி அரசு செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. மன் கி பாத் உரைகளில் பெண்களைப் பற்றி உயர்வாக பேசி விட்டு, 33 சதவித ஒதுக்கீட்டில், பெண்க ளுக்கு கல்விக்கு நிதி ஓதுக்குவதில், பெண்க ளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதில் எந்த முயற்சியும் எடுக்காத அரசாக உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள் 14 சதவீதமே உள்ளனர். நாடு முழுவதும் சட்ட மன்றங்களில் 9 சதவிகிதமே பெண்கள் உள்ள னர்.
உழைப்பு சந்தையில் பெண் உழைப்பா ளர்கள் பங்கேற்பில் உலகிலேயே இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. கடந்த 8 ஆண்டு களில் வேலையிழந்தோர் பெரும்பான் மையினர் பெண்கள் தான். கிராமப்புற பெண்கள் பெரும் அளவில் நம்பி இருக்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு மிகவும் மோசமாக வெட்டப்பட்டுள்ளது. அங்கன் வாடி மற்றும் ஆஷா திட்டப்பணியாளர்களாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் பணியாற்றுகின்றனர். மிகக் குறைந்த ஊதி யத்தில் பணிபாதுகாப்பு இன்றி பணிபுரியும் அவர்கள் நிலைமையை மேம்படுத்த மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது போலவே பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு விழங்கிவரும் சிறு குறு மற்றும் நடுத் தர தொழில்கள் இன்று கடும் நெருக்கடியில் உள்ளன. குறிப்பாக அதிக அளவில் பெண் கள் பணிபுரியும் ஜவுளித்துறை இன்னும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணிபுரிந்து வரும் பெண்களுக்கும், பணி பாதுகாப்பு, சட்டப்பூர்வ ஊதியம் சமூகபாதுகாப்பு ஆகியவற்றை உத்தர வாதப்படுத்துவதில் ஒன்றிய அரசு அக்கறை கட்டப்படவில்லை. ஒருபுறம் அத்தியாவசிய உணவு பொருட்கள் கடும் விளைவு, மறுபுறம் ஏற்கனவே வாங்கி வந்த ஊதியத்தில் இழப்பு என பணிக்குச் செல்லும் இளம் பெண்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். அரசுத்துறை வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்வதிலும் மோடி அரசு அக்கறை கட்டாமல் உள்ளதை நாம் அறிவோம்.
பெண்கள் வேலைக்குச் செல்வதை விரும்பாத ஆர்எஸ்எஸ் அமைப்பு தான் பாஜகவுக்கு அரசியல் வழிகாட்டி என்பதை இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தச் சொல்கின்ற மநு ஸ்மி ருதியை ஆர்எஸ்எஸ் கொண்டாடி வருகி றது. பாலின சமத்துவம் என்பது ஆர்எஸ் எஸ்க்கு உடன்பாடு இல்லாத விஷயமாகும். இதுவரை பெண்கள் ஆர்எஸ்எஸ் அமைப் பில் உறுப்பினராக இல்லை. அரியா னாவில் நடைபெற உள்ள உயர்மட்ட கூட்டத் தில் பெண்களை பார்வையாளராக அனுமதி க்கலாமா என விவாதித்து வருகின்றனர். பாலின சமநிலை பற்றிய உலக அளவி லான விவரப்படி 2022 ஆம் ஆண்டில் இந்தியா 146 நாடுகளில் 135 ஆவது இடத்தில் உள்ளது. நம்மை விட 11 நாடுகள் தான் பின்னால் உள் ளன. பாலின வன்கொடுமை சார்ந்த குற்றங்க ளில் தேசிய குற்றப் பதிவு ஆணைய தரவு பதிவுகளின் படி 2011 ஆம் ஆண்டில் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் என்பது 2,28,650 ஆகும். அதுவே 2021 ஆம் ஆண்டில் பதிவா னவை 428272 குற்றங்கள். பத்தாண்டுகளில் 87 சதவீத குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் பதிவாகி உள்ளன. இத்தகைய குற்றங்களை தடுப்பதில் பாலின சமத்துவம் குறித்த அரசின் பார்வை முக்கியமானதாகும். எனவே இளம்பெண்களுக்கான வேலை வாய்ப்பு பாலின சமத்துவம், பாலியல் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை ஆர்எஸ்எஸ்இன் சிந்தாந்்தத்திற்கு எதிரான போராட்டத்தோ டும், பாஜக அரசின் பொருளாதாரக் கொள் கைக்கும் எதிரான போராட்டத்தோடும் இணைத்தே நடத்த வேண்டியுள்ளது.
சமூக நீதிக்கான வலுவான போராட் டங்கள் நடந்த பாரம்பரியம் கொண்ட தமிழ் நாட்டில், இளம் பெண்களுக்கான வேலை வாய்ப்பு, பணி பாதுகாப்பு, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் இவற்றுக்காக இன்னும் போராட வேண்டி உள்ளது. சில நாள்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் தனது டிவிட்டர் பதிவில் தமிழ் நாட்டில் தான் அதிகம் பெண்கள் பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக ஒரு செய்தியை செய்தியை பகிர்ந்து, பொரு ளாதார நடவடிக்கையில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடும் மாநிலம் என்று மகிழ்ச்சி யை வெளிப்படுத்தி இருந்தார். ஒருபுறம் இது மகிழ்வான விஷய மாக இருந்தாலும் மறுபுறத்தில் இன்று தமிழ் நாட்டில் பணிபுரியும் இளம் பெண்களின் பாது காப்பு கேள்விக்குறியாக உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆயிரக்க ணக்கான பெண்கள் போராட்டம் நடத்தி யதை நாம் அறிவோம். இன்றும் தமிழ் நாட்டின் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து துவக்கப்படும் தொழிற்சாலைகளில் சட்டப்பூர்வ ஊதியத்தை எதிர்பார்த்து பெண்கள் காத்து கிடக்கின்றனர். தமிழ்நாட்டில் பெருமளவு பெண்கள் முறை சாரா தொழில்களில் உள்ளனர். அவர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக் கப்பட வேண்டும். கடைகளில், வணிக வளா கங்கள் பணிபுரியும் பெண்களுக்கு உட்கார்ந்து வேலை செய்யும் உரிமை வழங்கப் பட வேண்டும். சென்னை, கோவை போன்ற நகரங்களில் பணிபுரியும் இளம்பெண் களுக்கு பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அரசு சார்பில் உருவாக்கப்பட வேண்டும். பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை களை தடுத்து நிறுத்த விசாகா கமிட்டி பரிந்துரையின் படி குழுக்கள் உருவாக் கப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவை குறித்தெல்லாம் விவாதித்து கோரிக்கைகளை உருவாக்கி வென்றெடுக் கஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநில இளம் பெண்கள் மாநாடு 2023 மார்ச் 19ஆம் தேதியன்று கோவையில் கூடு கிறது. - எஸ்.பாரதி (மாநில பொருளாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்)