சேலம், ஆக.29- ஓமலூர் சுங்கச்சாவடியில் உயர்த்தப் பட்டுள்ள கட்டணம் விபரம் அறிவிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரில் அமைந் துள்ள சுங்கச்சாவடியில் ஆண்டுதோ றும் செப்.1 ஆம் தேதி முதல் நகாய் உத் தரவின் பேரில், கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ் சாலை எண்:7, தும்பிப்பாடி நாமக்கல் பிரிவு 68 கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு உள்ள நான்கு வழி சாலைகளை எம்பிஆர் இன்பரா ஸ்டெக்சர்ஸ் அண்டு டோல் வேஸ் லிமிடெட் நிர்வகித்து வரு கிறது. நகாய் உத்தரவின் பேரில் தற் போது கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள் ளது. அதன்படி, கார், பயணியர் வேன் மற்றும் ஜீப் ஆகியவற்றிக்கு, ஒரு வழி கட்டணமாக ரூ.95, பலமுறை கட்டண மாக (ஒரு நாளில்) ரூ.145, ஒரு மாத கட்டணமாக ரூ.2910, இலகு வர்த்தக வாகனத்திற்கு ஒரு வழி கட்டணமா ரூ.170, பலமுறை கட்டணமாக (ஒரு நாளில்) ரூ.255, மாதாந்திர கட்டணமாக ரூ.5105, பேருந்து மற்றும் டிரக் ஆகிய வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக ரூ.340, பலமுறை கட்டணமாக (ஒரு நாளில்) ரூ.510, மாதாந்திர கட்டணமாக ரூ.10205, மாதாந்திர பள்ளி பேருந் திற்கு கட்டணமாக ரூ.1000, மல்டி ஆக் ஸெல் வாகனத்திற்கு ஒரு வழி கட்டண மாக ரூ.545, பலமுறை கட்டணமாக (ஒரு நாளில்) ரூ.820, மாதாந்திர கட்ட ணமாக ரூ.16405 விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் வர்த்தக பயன்பாடு இல்லாத வாகனம் மற்றும் சுங்கச்சாவடி யில் இருந்து 10 கிலோ மீட்டர்க்குள் வசிப்பவர்களுக்கு மாதாந்திரக் கட்ட ணமாக ரூ.150, சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் வசிப்பவர்க ளுக்கு மாதாந்திரக் கட்டணமாக ரூ.300 விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.