districts

img

ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம்: காலிக்குடங்களுடன் மறியல்

பென்னாகரம், பிப்.2- பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பகு தியில் 3 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தைக் கண்டித்து அப்பகுதி பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் ஒன்றியம், பிக்கிலி ஊராட்சிக் குட்பட்ட குறவன் திண்ணை, பாணா கட்டு கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள நீர்த்தேக்க தொட்டியிலி ருந்து ஒகேனக்கல் குடிநீர் வழங் கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு குறவன் திண்ணை  கிராமத்தில் உள்ள 30 ஆயிரம் லிட் டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி மற்றும் பாணாகட்டு கிரா மத்தில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி ஆகியவை ஒகேனக்கல்  குடிநீர் திட்டத்தின் கீழ் இணைக்கப் படவில்லை என்றுக்கூறி இந்த நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு ஒகேனக் கல் குடிநீர் விநியோகம் நிறுத்தப் பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இத னால் கடந்த மூன்று மாதங்களாக விலை கொடுத்து குடிநீர் வாங்கி  பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்த  மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை  மனு அளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வெள்ளி யன்று காலை பிக்கிலி சாலையில் புதுகரம்பு என்ற பகுதியில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் காவல்  துறையினர் சம்பவ இடத்திற்கு  வந்து, கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து உடனடியாக ஒகேனக் கல் குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுத்தனர். இதனையடுத்து போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங் கிருந்து கலைந்து சென்றனர்.