திருப்பூர் ஜூலை 23,, திருப்பூரில் ஒரு ரேசன் கடையில் விற்பனையாளர் 20 கிலோ பில் போட்டு, ரேசன்கார்டுதாரருக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கி முறை கேட்டில் ஈடுபட்டார். இது குறித்து புகாரின்பேரில் கூட்டுறவு மற்றும் காவல் துறையினர் சம்பவம் நடை பெற்ற ரேசன் கடைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி ரேசன் கடையில் செவ்வாயன்று அப்பகுதி யில் வசிக்கும் கூலி தொழிலாளி பிர பாகரன் என்பவர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த கடை விற்பனையாளர், கட்டாயப்ப டுத்தி ராகி மாவு, அரிசி, சர்க்கரை, ஆயில் உள்ளிட்டவற்றை வழங்கி இதற்கு ரூ.120 கேட்டுள்ளார். அப் போது 110 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் பணம் குறைவாக இருப்ப தாக பிரபாகரன் கூறியபோதும் 120 ரூபாய் வேண்டும் என கட்டாயப்ப டுத்தினார். மேலும் விற்பனையாளர் தனது செல்போன் எண்ணை வழங்கி ஜீ பே மூலம் ரூ.120 பெற்றுக் கொண்டு அரிசி 20 கிலோ, சர்க்கரை 2 கிலோ, சமையல் ஆயில் 1 லிட்டர், ராகி மாவு அரைக் கிலோ வழங்கியுள்ளார். அப்போது பையில் அரிசி வாங்கிய பிரபாகரன் எடை குறை வாக உள்ளதாக சந்தேகம் அடைந்து அருகிலுள்ள கடையில் மீண்டும் எடையை சரி பார்த்துள்ளார். அப் போது 9 கிலோ 600 கிராம் எடை குறை வாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் சம்பந்தப்பட்ட ரேசன் கடை விற்பனையாளரிடம் எடை குறைவாக அரிசி வழங்கியது குறித்து கேட்டுள்ளார். அதற்கு விற்ப னையாளர் அப்படிதான் இருக்கும், ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட வர் சமூக ஆர்வலர் சரவணன் என்பவ ரிடம் இது குறித்து புகார் கூறியிருக்கி றார். சரவணன் உடனடியாக இது தொடர்பாக திருப்பூர் 15 வேலம்பா ளையம் காவல் நிலையத்திற்கும், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட கூட்டுறவு துறை இணைப்ப திவாளர் உள்ளிட்டவர்களுக்கும் புகார் அளித்தார். உடனடியாக திருப்பூர் 15 வேலம் பாளையம் காவல் நிலையத்தில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் தலை மையில் வந்து விசாரணை நடத்தி னர். அதன் பிறகு சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுறவு துறை துணை பதி வாளர் பழனிசாமி, வடக்கு வட்ட குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் உஷாராணி, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டவர்களும் நேரடியாக அந்த ரேசன் கடைக்கு வந்து தொடர் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பொது மக் கள் ரேசன் கடைக்கு முன்பாக திரண்டு வந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும்போது, மற்ற பொருட்கள் வாங்கக் கட்டாயப் படுத்துவதாகவும், எடை குறைவாக அளந்து கொடுப்பதாகவும் சரமாரி யாக புகார் கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் கடையில் ஆய்வு செய் தனர். அப்போது 20 கிலோ அரிசி வழங்கியுள்ளதாக பிரபாகரனுக்கு எஸ் எம் எஸ் போன நிலையில் வெறும் 10.கிலோ அரிசி வழங்கியி ருப்பதை உறுதி செய்தனர். அவ ருக்கு அதிகாரிகள் எஞ்சிய 10 கிலோ அரிசி வழங்கினர். கூட்டுறவு அதிகாரி கள் நேரடியாக விசாரணை நடத்தி இந்த ரேசன் கடையில் முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்தனர். இந்நிலையில் கடை விற்பனை யாளர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நிர்வாக நடவடிக்கை யில் இருந்து தப்புவதற்கு முயற்சிப்ப தாகக் கூறப்படுகிறது. எனினும் எடை குறைத்து மோசடி செய்தது, மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்ப டுத்துவது என தொடர்ந்து இந்த கடை விற்பனையாளர் அராஜகமான முறையில் நடந்து கொள்வதுடன், முறைகேட்டில் ஈடுபட்டதால் கூட்டு றவு துறை அதிகாரிகள் அந்த கடை விற்பனையாளர் மீது கட்டாயம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலை யிட்டு குற்றம் செய்த விற்பனையா ளர் மீது நடவடிக்கை எடுப்பதை உறு திப்படுத்த வேண்டும் என பொதுமக் கள் கூறினர்.