districts

img

தனியார் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு

கோவை, மே 20- அடுத்த மாதம் (ஜூன்) பள்ளிகள் திறக்க உள்ள நிலை யில், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்கு வரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதியன்று  பள்ளிகள் திறக்க உள்ளதால், தனியார் பள்ளி வாகனங்கள்  அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி தமிழ் நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம் நேஷனல் பள்ளி மைதானத்தில் சுற்று வட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 56 பள்ளிகளில்  இயங்கி வரும் 393 பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப் பட்டன.  இந்நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் வட்டார போக்கு வரத்து அலுவலர் தியாகராஜன் (பொ) தலைமை வகித்தார்.  வட்டாட்சியர் சந்திரன், மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர்  நவநீத கிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக் குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வாகனங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா?  வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஆர்எஸ் கருவிகள்,  தீயணைப்பு கருவிகள் அவசரகால வழி கதவுகள் சரியாக செயல்படுகிறதா? முதலுதவி பெட்டி உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவ ராக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் கண் பரிசோதனை  செய்து கொள்ள வேண்டும். நகர் பகுதியில் 40 கிலோ மீட்டர்  வேகத்தில் பள்ளி பேருந்துகளை இயக்க வேண்டும், என் றனர்.