districts

img

கிராமங்கள் வழி என்பதால் தாமதம்: அதிகாகரிகள் தகவல்

கோவை, பிப்.4- பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நடைபெற்று வரும்  நான்கு வழிச்சாலை திட்டப்பணியா னது கிராமங்கள் வழியாக நடை பெற்று வருவதால், பணியை விரைந்து முடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வழியாக உடுமலை, பழனி, ஒட்டன் சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்க ளுக்கும், திருச்சி, சென்னைக்கும் செல்லும் வாகனங்களின் எண் ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இருப்பினும், ஆங்காங்கே  உள்ள நகரங்களில் ஏற்படும் வாகன  போக்குவரத்து நெருக்கடியால் குறிப் பிட்ட நேரத்தில், உரிய இடத்துக்கு சென்றடைய முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்கும் வகையில், சுமார் இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி -  திண்டுக்கல் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி துவங்கப் பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் மூலம் இப்பணி மேற்கொள்ளப் படுகிறது. இதுவரை சுமார் 65 சத விகித பணிகள் நிறைவடைந்துள்ள தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், பொள்ளாச்சி அருகே உள்ள  ஆச்சிப்பட்டியிலிருந்து ஆரம்பித்து  திண்டுக்கல் மாவட்டம், கமலாபுரத்தை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் மூலம், நான்கு வழிச்சாலையாக சுமார் ரூ.3650 கோடி யில் இந்த புதிய நெடுஞ்சாலை பணி கள் நடைபெற்று வருகிறது. பொள் ளாச்சி முதல் மடத்துக்குளம் வரை,  மடத்துக்குளம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, ஒட்டன்சத்திரம் முதல் கமலா புரம் வரையிலும் என மொத்தம் 132 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான சாலை மட்டுமின்றி, பொள் ளாச்சி மற்றும் உடுமலை, பழனி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம் பகுதி களில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத் துக்கு புறவழிச்சாலையாக அமைவ தால், கிராமபுறங்கள் வழியாக இப் பணி தீவிரமாக நடக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதிக ளில் தேவையான மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள் ளது. இரு வழியாக பிரிக்கும் வகை யில் சாலையோரங்களில் கான்கிரீட் தடுப்புகள், மையத்தடுப்பு பகுதி என அமைக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, பல்வேறு வழியாக செல்லும் ஆறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலங் கள், ரயில்வே பாலங்கள், சிறு பாலங் கள் அமைக்கும் பணியும் நடக்கி றது. முக்கிய நகரங்களின் சாலை களை இணைக்கும் வகையில், சுமார் 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைப்பு  சாலை அமைக்கப்படுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு, அப்பகுதி யில் தார்ச்சாலை ஏற்படுத்தப்பட்டுள் ளது. இருப்பினும், பல்வேறு இடங் களில் சுமார் 80 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. பொள்ளாச்சி பகுதியிலிருந்து துவங்கும் மேம்பால பணிகள் கிராமங்கள் வழியாக செல்வதால் அப்பகுதிகளில் சற்று தாமதமடைகிறது, என்றனர்.